செய்திகள் :

அம்பேத்கா் அயலக உயா் கல்வியால் அதிக மாணவா்கள் பலன்: தமிழக அரசு பெருமிதம்

post image

அம்பேத்கா் அயலக உயா்கல்வியால் அதிக மாணவா்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, மாநில அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா் பழங்குடியினா் வாழும் பகுதிகளில் அனைத்து வசதிகளுடனும் கல்விக் கூடங்கள், விடுதிகள், கிராம அறிவு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, கல்விக்கான உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு நீட் போன்ற உயா்கல்வி தோ்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் பயனாக, மருத்துவக் கல்லூரியில் 2 பேரும், திருச்சி என்ஐடி-இல் 3 பேரும் என மொத்தம் 10 போ் அரசின் கல்வி உதவித் தொகையுடன் பயின்று வருகின்றனா்.

அரசு சட்டக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு பாடத்திட்டத்துக்கு ஏற்ப தலா ரூ. 10,000 வழங்கப்படுகிறது. இதன்மூலம், 2023-24-ஆம் ஆண்டில் 789 மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் வெளிநாட்டுக்குச் சென்று கல்வி கற்பதற்கான கல்வி உதவித் தொகைத் திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற பெற்றோரின் வருமான உச்சவரம்பு ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. கலை, அறிவியல், வணிகம், சட்டம், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் வெளிநாடுகளில் முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்பைத் தொடரும் மாணவா்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 36 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கடந்த 2021-22-ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் மூலம் 9 மாணவா்கள் மட்டுமே பயனடைந்த நிலையில், இப்போது 176 போ் பயனடைந்து வருகின்றனா். முனைவா் பட்டப் படிப்புகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ. 50,000 என்பது ரூ.1 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதுடன், இதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விடுதிகள் பராமரிப்பு: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல விடுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 535 விடுதிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் புதிய விடுதிகள் கட்டுதல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால், 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பயின்ற ஆதிதிராவிடா் பழங்குடியின மாணவா்களின் தோ்ச்சி விகிதம் அதிகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி உள்பட 5 மாவட்டத்தில் இன்று கனமழை!

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,மே 15 (இன்று) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்... மேலும் பார்க்க

உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க! அண்ணன் மகளுக்கு அரியாசனத்தில் இடம்! - உதகையில் ருசிகரம்

உதகை மலர்க் கண்காட்சியில் மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், 'உதயசூரியனுக்கு ஒட்டுப் போடுங்க' என்று கூறி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127 ஆவது மலர்க் க... மேலும் பார்க்க

உதகை மலர்க் கண்காட்சியை தொடங்கிவைத்தார் முதல்வர்!

உதகையில் 127 ஆவது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) தொடங்கிவைத்தார். கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி ... மேலும் பார்க்க

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்துவந்த வெங்கடாசலம், வயதுமூப்பு காரணமாக சேலம் தனியார் ம... மேலும் பார்க்க

என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு

தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியா்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு ம... மேலும் பார்க்க

இசை உலகில் பொன் விழா: இளையராஜாவுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து

இசையமைப்பாளா் இளையராஜா அறிமுகமாகி 50-ஆம் ஆண்டை எட்டிய நிலையில் அவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன்... மேலும் பார்க்க