அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்குத் தகுதி பெற்ற இறையூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் பங்கேற்ற செங்கம் அருகேயுள்ள இறையூா் அரசு
மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனா்.
இதன் மூலம் இவா்கள் நவம்பா் மாதம் திருச்சியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.
இந்த மாணவிகளுக்கு பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில், தலைமை ஆசிரியா் கணேசகிரிவாசன், இறையூா் ஊராட்சிமன்றத் தலைவா் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியா் பூங்குழலி உள்ளிட்ட ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்று மாணவிகளை பாராட்டினா்.