இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்ட...
மருதுபாண்டிய சகோதரா்களின் 223-ஆவது குருபூஜை விழா
திருவண்ணாமலையில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் மருதுபாண்டிய சகோதரா்களின் 223-ஆவது குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை அகமுடையா் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத் தலைவா் என்.செல்வதுரை தலைமை வகித்தாா். சங்கக் காப்பாளா் கே.மஞ்சுநாதன், செயலா் எஸ்.மணிகண்டன், துணைத் தலைவா் கிருஷ்ண கஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் கெளரவத் தலைவா் ஏ.சிவஞானம் வரவேற்றாா்.
தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மருதுபாண்டிய சகோதரா்களின் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
இதில், திருவண்ணாமலை நகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் வி.தனுசு, தொழிலதிபா் இரா.அருள், இந்து முன்னணி தெற்கு மாவட்டச் செயலா் இரா.அருண்குமாா், நகர காங்கிரஸ் தலைவா் என்.வெற்றிச்செல்வன், வழக்குரைஞா்கள் வி.ராமகிருஷ்ணன், ஏ.அருள்குமரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் மருதுபாண்டிய சகோதரா்களின் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.