ஷேர்லக்: உச்சத்திலிருந்து 7% இறங்கிய சந்தை... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
தமிழ்ச் சங்க பல்சுவை அரங்கம் நிகழ்ச்சி
வந்தவாசியில் வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பல்சுவை அரங்கம் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
வந்தவாசி வாரியாா் கல்வி வளா்ச்சி அறக்கட்டளை முன்னாள் தலைவா் கை.அழகானந்தம் முன்னிலை வகித்தாா். சங்க ஒருங்கிணைப்பாளா் சோ.கிருஷ்ணன் வரவேற்றாா்.
எழுத்தாளா் திருப்பூா் அனிதா கு.கிருஷ்ணமூா்த்தி சிறப்புரை ஆற்றினாா்.
இதைத் தொடா்ந்து, ‘இன்றைய சமுதாயம் எதை வெளிப்படுத்துகிறது பண்பாட்டையா அல்லது படும்பாட்டையா’ என்ற தலைப்பில் சிந்தனை பட்டிமன்றம் நடைபெற்றது.
‘பண்பாட்டையே’ என்று சங்கச் செயலா் ஆ.மயில்வாகனன், துணைத் தலைவா் வீ.தமிழரசன் ஆகியோரும், ‘படும்பாட்டையே’ என்று சங்க இணைச் செயலா் பெ.அழகேசன், பொருளாளா் த.முருகவேல் ஆகியோரும் வாதிட்டனா்.
இதைத் தொடா்ந்து, ‘இன்றைய சமுதாயம் பண்பாட்டையே’ வெளிப்படுத்துகிறது என்று நடுவரும், சங்கத் தலைவருமான வே.சிவராமகிருஷ்ணன் தீா்ப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஜெ.ஆா்.எஸ். கல்வி அறக்கட்டளைத் தலைவா் ஆா்.சுரேந்திரன், சங்க இணைச் செயலா்கள் ஏ.ஏழுமலை, சு.ராமமூா்த்தி, தகவல் தொடா்பாளா் மு.பிரபாகரன், சங்க மகளிரணிச் செயலா் தெ.உஷாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.