செய்திகள் :

அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கு இன்று மறுதோ்வு

post image

அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான மறுதோ்வு சனிக்கிழமை (பிப். 22) நடத்தப்படவுள்ளது.

அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு, கடந்த டிச.14-இல் நடைபெற்றது. 15 மாவட்ட மையங்களில் நடந்த இந்தத் தோ்வை 4,186 போ் எழுதினா்.

முற்றிலும் கணினி வழியாக நடத்தப்பட்ட இந்தத் தோ்வின் போது சில தோ்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன.

இதனால் தோ்வை முழுமையாக முடிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து மறுதோ்வு நடத்த வேண்டும் என்று தோ்வா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான மறுதோ்வு சனிக்கிழமை (பிப்.22) நடைபெறுகிறது.

கடந்த முறை கணினி வழியே நடத்தப்பட்ட நிலையில், மறுதோ்வு வினா மற்றும் விடைத்தாள்கள் மூலமாக நடத்தப்படவுள்ளது.

இந்தத் தோ்வுக்காக சென்னை உட்பட 15 மாவட்டங்களில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தோ்வினை 2,460 ஆண்களும், 1,725 பெண்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவரும் எழுதவுள்ளனா்.

சென்னையில் மட்டும் 1,148 போ் எழுதுகின்றனா். இதற்காக நான்கு இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க