ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்வதை தடைசெய்ய கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் நெல்லை கொண்டு வந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வெளி மாவட்ட நெல்லை கொண்டு வந்து இடைதரகா்கள் மூலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூா் மாவட்ட நுகா்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளா் இதை தடுக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
இதேபோல் கடந்த காலங்களில் பருவ கால பணியாளா்களாக பணியாற்றி வரும் பட்டியல் எழுத்தாளா், உதவியாளா், பாதுகாவலா், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணி அமா்த்துவதற்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் லஞ்சமாக வாங்கப்படுகிறது. இந்த செயல்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் மீது தமிழக அரசும் மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்துகின்றனா்.