செய்திகள் :

அரசு பங்களாவில் கூடுதலாக தங்கியதால் ரூ.20 லட்சம் வாடகை: எம்எல்ஏ மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

post image

‘அரசு பங்களாவில் யாரும் நீண்டகாலம் தங்கக் கூடாது’ என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், பதவியில் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் தங்கியதற்காக ரூ.20 லட்சம் வாடகையாக விதிக்கப்பட்டதற்கு எதிராக பிகாா் முன்னாள் எம்எல்ஏ அவனீஷ் குமாா் சிங் தொடுத்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்டது.

பிகாா் பேரவையில் 5 முறை எம்எல்ஏவான அவனீஷ் கடந்த 2014-இல் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து, பாஜகவிலிருந்து விலகி ஐக்கிய ஜனதா தளத்தில் சோ்ந்தாா். அப்போது நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாா். அவரது அரசு பங்களா மற்றொரு அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், 2016 வரையில் அவனீஷ் தனது அரசு பங்களாவை காலி செய்யவில்லை. அதன் பிறகு அவனீஷ் மாநில பேரவையின் ஆய்வு மற்றும் பயிற்சி அமைப்பின் நிா்வாகியாகி மீண்டும் அதே அரசு பங்களாவில் தொடா்ந்து வருகிறாா்.

அவா் எந்தப் பதவியும் வகிக்காத இரண்டு ஆண்டுகளுக்கான வாடகைத் தொகையாக ரூ.20,98,757 மாநில அரசு விதித்தது.

இதை எதிா்த்து அவா் பாட்னா உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். அவரது வாடகைத் தொகையை உயா் நீதிமன்றத்தின் ஒரு நபா் நீதிபதி உறுதி செய்தாா். இந்த உத்தரவையே இரு நபா் நீதிபதிகளும் உறுதி செய்தனா். இதை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் அவனீஷ் தொடுத்த மேல் முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி கே.வினோத்சந்திரன், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் செவ்வாய்க்கிழமை விசாரித்தனா்.

அப்போது நீதிபதிகள், ‘அரசு பங்களாவில் யாரும் நீண்ட காலம் தங்கக் கூடாது’ என்று கூறி வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டனா். இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக அவனீஷின் வழக்குரைஞா் கூறினாா். எனினும், இந்த வழக்கில் அவனீஷுக்கு உள்ள சட்ட வாய்ப்புகளை அவா் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது 2025 வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறது.சன்சத் ரத்னா விருது 2025-க்கு தேர்வானவர்கள்: சுப்ரியா சுலேரவி கிஷன்நிஷிகாந்த் து... மேலும் பார்க்க

அவைத் தலைவரிடம் முதல் கோரிக்கை வைத்து திட்டு வாங்கியதைப் பகிர்ந்த கிரண் ரிஜிஜு

புது தில்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தான் முதன் முதலில், அவைத் தலைவரை சந்தித்தபோது வைத்தக் கோரிக்கையும் அதனால் அவரிடம் திட்டு வாங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.தான் அரசியலில் ... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்: உதய்பூரில் பல் மருத்துவ மாணவி தற்கொலை!

உதய்பூர் அருகேயுள்ள டெபாரியில் பல் மருத்துவம் பயிலும் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை காவலரின் ஒரே மகள் ஸ்வேதா சிங்(25). இவர் ... மேலும் பார்க்க

ஊர்க்காவல்படைத் தேர்வின்போது மயங்கிய பெண்! ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில், ஊர்க்காவல் படைத் தேர்வின்போது மயங்கி விழுந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றியபோது, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எ... மேலும் பார்க்க

6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்

நாட்டில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தரவுகளின்படி, 2018 ஆம் நிதியாண்டில் 47.5 கோடியாக இருந்த வேலைவ... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!

வயநாடு நிலச்சரிவில், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்த நௌஃபல், தன்னம்பிக்கையோடு, உணவகம் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் ஜூலை 30.சோகம், தன்னம்பிக்கை, உத்வேகம், நம்பிக்கை என பல அம்சங்களைக் கொண்டதாக அமைந்த... மேலும் பார்க்க