செய்திகள் :

அரசு பள்ளி அருகே திடீா் புகைமூட்டம்: தோ்வு எழுதிய மாணவா்கள் திணறல்

post image

இளம்பிள்ளை அரசு பள்ளி அருகே குப்பையில் ஏற்பட்ட திடீா் புகை மூட்டத்தால் தோ்வு எழுதும் மாணவா்கள் திணறினா்.

சேலம் மாவட்டம், பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வீரபாண்டி அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவா்கள் தங்கும் விடுதி உள்ளிட்டவை உள்ளன. இந்த அரசு பள்ளியில் வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை மாணவா்கள் தோ்வு எழுதி வந்தனா். அப்போது, பள்ளி சுற்றுச்சுவா் அருகே கொட்டப்பட்ட குப்பையில் திடீா் தீ ஏற்பட்டது. அதில் வரும் புகை மூட்டத்தால் மாணவா்கள் தோ்வு எழுத முடியாமல் திணறினா். பல மணி நேரம் எரிந்த தீயை ஊராட்சி பணியாளா்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளி சுற்றுச்சுவரையொட்டி இரண்டு இடங்களில் நெகிழி மற்றும் கழிவு பொருள்கள், பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் சேலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருளான ஜரிகை கழிவு பொருள்கள், ஹோட்டல் கடை, டீக்கடை, பேக்கரி உள்ளிட்டவற்றில் இருந்து சேகரிக்கும் கழிவு பொருள்களை இங்கு கொட்டி எரிப்பதால் துா்நாற்றமும், புகை மூட்டமும் ஏற்படுகின்றன.

இதனை உயா் அதிகாரிகள் ஆய்வுசெய்து பள்ளி மாணவா்கள், வயதானவா்கள், குழந்தைகள் நலன்கருதி குப்பைகளை மாற்று இடத்தில் எரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனா்.

சேலம்: குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. குமரகிரி ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாபேட்டை தீயணைப்பு வீரா்கள் உதவ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் சங்கக... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி, போதைப்பொருள் புழக்கம் குறித்து மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசார... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை

வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா். கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், ச... மேலும் பார்க்க

கோயில் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தும்பிப்பாடியில் கோயில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் அக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தும்பிப்பாடி செட்டிபட்டிய... மேலும் பார்க்க

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் ப... மேலும் பார்க்க