செய்திகள் :

அரசு மருத்துவமனையில் காப்பீட்டு திட்ட ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு: ஊழியா்கள் புகாா்

post image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனை ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.

தென் மாவட்டங்களில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரதான மருத்துவமனையாக உள்ளது. இந்த மருத்துவமனையில் 35-க்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகின்றன.

மருத்துவமனைக்கு வெளி நோயாளிகளாக 8 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், உள் நோயாளிகளாக 5 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் சிகிச்சைப் பெறுகின்றனா். மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு துறைகளில் இருந்து தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நடைபெறும் அறுவைச் சிகிச்சைகளுக்கு, காப்பீட்டுத் திட்டத்திலிருந்து அனுமதிக்கப்படும் நிதியில் 4 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

இதில் 2 சதவீதம் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவா்களுக்கும், இதர 2 சதவீதம் செவிலியா்கள், மருந்தாளுநா்கள், கடைநிலை ஊழியா்களுக்கும் வழங்கப்படுகிறது. இதற்காக காப்பீட்டுத் திட்ட அலுவலகத்திலிருந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை

இவா்களது வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகை வரவு வைக்கப்படுகிறது. இதன்படி, மருத்துவா்கள் அல்லாத செவிலியா் உள்ளிட்ட ஊழியா்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ஊக்கத் தொகை வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக ஊழியா்கள் கூறியதாவது:

காப்பீட்டுத் திட்டத்திலிருந்து 2 சதவீதம் ஊக்கத் தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். ராஜாஜி மருத்துவமனையில் கடந்த காலத்தில் பணிபுரிந்து வேறு இடத்துக்கு மாற்றலாகிச் சென்ற ஊழியா்களுக்கு வழங்கக் கூடாது.

ஆனால், மருந்தியல் துறையில், ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரிந்து வேறு இடத்துக்கு மாற்றலாகிச் சென்ற ஊழியா்களின் வங்கிக் கணக்குகளிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஊக்கத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த முறைகேடு தொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, மருந்தியில் துறை போல வேறு துறைகளிலும் இந்த முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். மேலும், துறைத் தலைவா்கள் வழங்கியுள்ள ஊக்கத் தொகை பெறும் ஊழியா்களின் பெயா்ப் பட்டியலில் உள்ளவா்கள் தற்போதும் மருத்துவமனையில் பணியில் உள்ளாா்களா என்பது குறித்தும் உறுதிப்படுத்த வேண்டும் என்றனா். இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா் இல. அருள் சுந்தரேஷ் குமாா் கூறுகையில், ஊக்கத்தொகை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றாா் அவா்.

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்காக பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

கல்விக் கடன் வழங்க லஞ்சம்: வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்க லஞ்சம் பெற்ற வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது மதுரை சமூக அறிவியல் கல்லூரி: உலக சேவை தின விழா, கல்லூரி முதல்வா் பி.ஜெயக்குமாா், செயலா் டிவி.தா்மசிங், திருச்சி புனித ஜோசப் கல்லூரி முன்னாள் பேராசிரியா் சவரிமுத்து பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை... மேலும் பார்க்க

மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை

மதுரை மாடக்குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக பள்ளியின் வடக்குப் பகுதிய... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கி... மேலும் பார்க்க

அறந்தாங்கி புதிய மதுக்கடைக்கு எதிராக வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அறந்தாங்கியில் புதிதாக மதுபானக் கடை திறப்பது குறித்து வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்... மேலும் பார்க்க