செய்திகள் :

`அரிய வகை உடும்புகள்; ஹைட்ரோபோனிக் கஞ்சா..' - விமானத்தில் தொடரும் கடத்தல் சம்பவங்கள்

post image

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த பேட்டிக் ஏர் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவரது உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பயணிகள் இருவர் தங்கள் உடமைகளில் இரண்டு அரிய வகை உடும்புகளை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடம் இருந்து உடும்புகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

udumbukal

அதேபோல், பேங்க்காக்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது, அதில் வந்த ஒரு பயணியின் உடமையை சோதனை செய்த பொழுது அதில் ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா இருந்துள்ளது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

kanja

மொத்தமாக 9.82 கிலோ அளவில் அந்த கஞ்சா இருந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஹைட்ரோபோனிக் வகை கஞ்சாவின் மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது.

கஞ்சாவை கடத்தி வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி, வெளிநாடுகளில் இருந்து உயிர்கள், கஞ்சா, வெளிநாட்டு பணம், தங்கம், சிகரெட்டுகள் உள்ளிட்டப் பொருள்கள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து உடும்புகள், கஞ்சா ஆகியவை கடத்தி வரப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை கத்தியால் குத்திய பாலிவுட் இயக்குநர்? - மும்பை போலீஸ் விசாரணை

பாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் மணீஷ் குப்தா. இவரிடம் மொகமத் லஷ்கர் என்பவர் டிரைவராக இருந்தார். மூன்று ஆண்டுகள் டிரைவராக பணியாற்றி வந்த மொகமத்திற்கு இயக்குனர் மணீஷ் சரியான நேர... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு; கண்டித்த கணவர் - கோபத்தில் மகளை கொன்று தாயும் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், பூவரசங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா (24). இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தத... மேலும் பார்க்க

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க