செய்திகள் :

பக்ரீத் திருநாள்! அரசியல் தலைவர்கள் வாழ்த்து

post image

பக்ரீத் திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்.

பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில், அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துகள். இந்த நாள் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும். நமது சமூகத்தில் அமைதிக்கான கட்டமைப்பை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்துடனும் வளத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரியும் வாழ்த்து தெரிவித்து, வாழ்த்துப் பரிமாற்றங்கள், அன்பளிப்புகள், நல்லெண்ண சந்திப்புகள், விருந்தோம்பல்கள் மூலம் இத்திருநாள் வானவில் அழகுடன் கொண்டாடப்படுகிறது.

அன்பு காட்டுதல், மன்னித்தல், அரவணைத்தல் போன்ற உயரிய பண்புகள் மக்களிடையே வளரவும், சமூகங்களுக்கிடையேயான உறவுகள் செழிக்கவும் இத்திருநாளில் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில், உன்னத தியாகத்தைப் போற்றும்வகையில், பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்

உயரிய தியாகத்தைப் போற்றும் இந்நன்னாளில் அனைவரிடத்தும் சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பூரண மகிழ்ச்சி நீடித்து நிலைக்க உறுதியேற்போம் என்று வாழ்த்தியுள்ளார்.

கிளாம்பாக்கம் அல்ல கிளர்ச்சிப்பாக்கம் - பயணிகள் அலைக்கழிப்பு: தவெக கண்டனம்!

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையத்தில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காமல் மக்களைக் கைக்குழந்தைகளோடு அலைக்கழித்து திமுக அரசு அவதிக்கு... மேலும் பார்க்க

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்க... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி கட்டணம்- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மதுரை-தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு... மேலும் பார்க்க

உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து

சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத், பொது சட்ட... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2001-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்... மேலும் பார்க்க

திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி தினகரன்

தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறி வருவது பயத்தின் வெளிப்பாடு என டிடிவி தினகரன் கூறியுள்ளார். திமுக ஆட்சி வேண்டாம் என்று நினைப்பவர்கள் தே... மேலும் பார்க்க