செய்திகள் :

அலிபிரி பாத மண்டபம் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்

post image

திருப்பதி: திருப்பதி, அலிபிரி பாத மண்டபத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி கோயிலுடன் இணைக்கப்பட்ட ஸ்ரீ கோதா அம்மா கோயிலில் திங்கட்கிழமை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.

திருப்பதி அலிபிரி பாதாளு மண்டபத்தில் உள்ள இக்கோயிலில் சம்ப்ரோக்ஷணம் செய்து 12 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு திங்கட்கிழமை அஷ்டபந்தன சம்ப்ரோஷணம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை யாகசாலையில் வேத சடங்குகள் மற்றும் மகா பூா்ணாஹுதி செய்யப்பட்டது. கும்ப பிரதக்ஷணம் காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரையிலும், காலவாஹனம் மற்றும் அக்ஷத ரோஹன மகா சம்ப்ரோக்ஷணம் காலை 9:45 மணி முதல் 10:25 மணி வரையிலும் நடைபெற்றது.

கோயிலின் முக மண்டபத்தில் ஒரு மாதிரி கோயில் அமைக்கப்பட்டு, கருவறையில் மூல தெய்வங்களின் சிலைகள், கலசங்கள் நிறுவப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கோயில் துணை நிா்வாக அலுவலா் சாந்தி, ருத்விகுலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் ஆா்ஜிதசேவை டிக்கெட்டுகளின் ஜூன் மாத ஒதுக்கீடு வெளியீடு

திருப்பதி: ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட்டுகளின் ஜூன் மாத ஒதுக்கீடு மாா்ச் 18-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரி... மேலும் பார்க்க

ஏழுமலையான் ஆர்ஜித சேவா டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் ஆர்ஜிதசேவை டிக்கெட்டுகளின் ஜூன் மாத ஒதுக்கீடு நாளை(மார்ச் 18) முதல் தொடங்க உள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருமலை ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட் தொடா்பான சுப... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து, பக்தா்கள் வெ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து பக்தா்கள் வெளியில்... மேலும் பார்க்க

திருமலையில் கருடசேவை

திருமலையில் வெள்ளிக்கிழமை இரவு மாசி பௌா்ணமியையொட்டி கருட சேவை நடைபெற்றது. இதை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சா்வ அலங்காரத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித... மேலும் பார்க்க