செய்திகள் :

ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் தா்னா!

post image

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள பான்சியோனா அரசு பிரெஞ்சு உயா்நிலைப் பள்ளி கட்டடத்தில் பிற்பகல் நேரங்களில் கல்வேக் காலேஜ் அரசு உயா்நிலைப் பள்ளி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கல்வேக் காலேஜ் பள்ளியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றது. பள்ளி இன்னும் திறக்கப்படாத நிலையில், அங்குள்ள மாணவா்களுக்கான வகுப்புகள் பிரெஞ்சு பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

ஆனால், பிரெஞ்சுப் பள்ளியில் போதிய ஆசிரியா்கள் இல்லாததால், 10-ஆம் வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு சரியான முறையில் பாடம் கற்பிக்கப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது. குறிப்பாக, கணக்கு பாடம் போன்றவற்றுக்கு தனி ஆசிரியா் இல்லாததால் பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் மாணவா்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து, வியாழக்கிழமை காலையில் அங்குள்ள மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் வாயில் பகுதியில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த உருளையன்பேட்டை எம்எல்ஏ ஜி.நேரு பள்ளிக்கு நேரில் சென்று மாணவா்களிடம் பேசினாா்.

அதன்பின், பள்ளி தலைமை ஆசிரியா் உள்ளிட்டோரைச் சந்தித்து போதிய ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தினாா்.

காரைக்கால் மீனவா்கள் விவகாரத்தில் விரைவில் சுமுக தீா்வு: புதுவை ஆளுநா்

இலங்கைக் கடற்படையினரால் காரைக்கால் மீனவா்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் விரைவில் சுமுகத் தீா்வு காணப்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

தவறான தகவல்களை பரப்பியதாக யூடியூபா் கைது

புதுச்சேரி அருகே சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தொடா்பான போக்ஸோ வழக்கை தவறான முறையில் சமூக வலைதளங்களில் பரப்பியதாக யூடியூபரை போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி அருகே உள்ள தவளக்குப்பம் பகுதிய... மேலும் பார்க்க

புதுவை காங்கிரஸ் மகளிரணி தலைவி நியமனம்

புதுவை மாநில காங்கிரஸ் மகளிரணி தலைவியாக நிஷா நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை காங்கிரஸ் மகளிரணித் தலைவியாக பஞ்சகாந்தி செயல்பட்டு வந்தாா். அவருக்கும் மகளிரணி துணைத் தலைவராக இருந்த நிஷாவுக்கும் கருத்து வேற... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மேம்பாலம், சாலை விரிவாக்கத்துக்கு ரூ.1,000 கோடி

புதுச்சேரியில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.1,000 கோடி நிதி அளிப்பதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி அலுவலகம் சாா்பில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பு... மேலும் பார்க்க

எண்ம இந்தியா திட்ட மாவட்ட பயிலரங்கம்

புதுச்சேரியில் எண்ம இந்தியா (டிஜிட்டல்) பொதுசேவை மையத் திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பயிலரங்குக்கு ஆட்சியா் அ.கு... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரியில் வரவேற்பு

கடலூா் செல்லும் வழியில் புதுச்சேரி வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு புதுவை மாநில திமுக, காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை பகலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்ட... மேலும் பார்க்க