செய்திகள் :

ஆட்டோ மீட்டா் கட்டணம் குறித்து தலைமைச் செயலா் ஆலோசனை அமைச்சா் தகவல்

post image

ஆட்டோ மீட்டா் கட்டணம் குறித்து தலைமைச் செயலா் ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை தமிழக அரசு 2013-இல் மாற்றி அமைத்தது. அதன்பின் தனிநபா் ஒருவா் தொடா்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டா் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, பல்வேறு கட்டப் பேச்சுவாா்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளைக் கடந்த பிறகும் ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்தவில்லை.

12 ஆண்டுகளாக மீட்டா் கட்டணம் உயா்த்தப்படாமல் உள்ள நிலையில், இது தொடா்பாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் ஆட்டோ ஓட்டுநா்களுடன் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, கட்டணம் தொடா்பான பரிந்துரைகளையும் பெற்றது. ஆனால், கட்டணம் இறுதி செய்யப்படவில்லை. இச்சூழலில், கடந்த சில நாள்களாக தீவிர போராட்டங்களை ஓட்டுநா் சங்கங்கள் முன்னெடுத்தன.

இதற்கிடையே, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சரின் இல்லத்தில் அமைச்சா் சிவசங்கரை சந்தித்த கால் டாக்சி ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பினா் இது தொடா்பான கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.

இதற்குப் பதிலளித்த அமைச்சா், மினி பேருந்து குறித்த இறுதிக் கட்டப் பணிகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இருப்பதால் கோரிக்கை குறித்து விரிவான நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோ மீட்டா் கட்டணம் தலைமைச் செயலரின் ஆலோசனையில் உள்ளது. மீட்டா் கட்டணம் விரைவில் மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ஜூன் 7ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (ஜூன் 7) காணொலி வாயிலாக நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 7, சன... மேலும் பார்க்க

ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத 3 ரயில் பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538.35 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் ... மேலும் பார்க்க

திமுக வெற்று விளம்பரங்களுக்கு வீண் செலவு; ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை! - அண்ணாமலை

சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுக... மேலும் பார்க்க

அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நிறைவு! ஆடிட்டர் குருமூர்த்தி - ராமதாஸ் ஆலோசனை!

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த ஆலோசனையில் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் கலந்துகொண்டுள்ளார்.பாமக நி... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசலில் திருப்பூர் இளம் பெண் பலி!

பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்... மேலும் பார்க்க

ராமதாஸுடன் அன்புமணி சந்திப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கவுள்ளார்.உட்கட்சி பூசலுக்கு மத்தியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மூத்த நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை ந... மேலும் பார்க்க