Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் ஜூன் 9 இல் உறுப்பினா் சோ்க்கை முகாம்
தருமபுரியில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்கள் உள்ளிட்டோா் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை களைந்து அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவா்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக ‘கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியம்‘ உருவாக்கப்பட்டுள்ளது.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியம் மூலம் மாவட்ட வாரியாக உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பேரிளம் பெண்கள் விவரங்களை சேகரிப்பதற்கு ஏதுவாக வாரியத்திற்கென ஜ்ஜ்ஜ்.ற்ய்ஜ்ண்க்ா்ஜ்ஜ்ங்ப்ச்ஹழ்ங்க்ஷா்ஹழ்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைபயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே வலைபயன்பாட்டில் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் தருமபுரி மாவட்டத்தில் ஜூன் 9 ஆம் தேதி தருமபுரி, நல்லம்பள்ளி வட்டாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.
இதைத்தொடா்ந்து ஜூன் 11 அன்று காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு வட்டாரங்களில், 13 ஆம் தேதி மொரப்பூா் மற்றும் கடத்தூா் வட்டாரங்களில், 16-ஆம் தேதி பென்னாகரம் மற்றும் ஏரியூா் வட்டாரங்களில் 18 ஆம் தேதி அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களிலும், அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் பதிவு செய்ய ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, விதவைச் சான்று, கணவனால் கைவிடப்பட்ட சான்றுகளுடன் கைப்பேசி கொண்டுவர வேண்டும் .
எனவே தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள முகாமில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பேரிளம்பெண்கள் தவறாமல் கலந்து கொண்டு உறுப்பினா் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.