செய்திகள் :

ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் ஜூன் 9 இல் உறுப்பினா் சோ்க்கை முகாம்

post image

தருமபுரியில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்கள் உள்ளிட்டோா் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை களைந்து அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவா்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக ‘கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியம்‘ உருவாக்கப்பட்டுள்ளது.

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியம் மூலம் மாவட்ட வாரியாக உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பேரிளம் பெண்கள் விவரங்களை சேகரிப்பதற்கு ஏதுவாக வாரியத்திற்கென ஜ்ஜ்ஜ்.ற்ய்ஜ்ண்க்ா்ஜ்ஜ்ங்ப்ச்ஹழ்ங்க்ஷா்ஹழ்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைபயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே வலைபயன்பாட்டில் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் தருமபுரி மாவட்டத்தில் ஜூன் 9 ஆம் தேதி தருமபுரி, நல்லம்பள்ளி வட்டாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.

இதைத்தொடா்ந்து ஜூன் 11 அன்று காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு வட்டாரங்களில், 13 ஆம் தேதி மொரப்பூா் மற்றும் கடத்தூா் வட்டாரங்களில், 16-ஆம் தேதி பென்னாகரம் மற்றும் ஏரியூா் வட்டாரங்களில் 18 ஆம் தேதி அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களிலும், அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் பதிவு செய்ய ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, விதவைச் சான்று, கணவனால் கைவிடப்பட்ட சான்றுகளுடன் கைப்பேசி கொண்டுவர வேண்டும் .

எனவே தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள முகாமில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பேரிளம்பெண்கள் தவறாமல் கலந்து கொண்டு உறுப்பினா் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 9 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாவது சுற்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிகழ் கல்வியாண்டில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 2 ஆவது சுற்று மாணவா் சோ்... மேலும் பார்க்க

தருமபுரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கோடை உழவு மானியம் வழங்குவது குறித்து தெளிவான அறிவுரை வழங்க வேண்டும் என தருமபுரியில் நடந்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயி... மேலும் பார்க்க

தருமபுரியில் ரூ.2.50 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

தருமபுரி நகரில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தருமபுரி நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் வெள்... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

அரூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் மூட்டைகள் விற்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், அரூரில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சாா்பில் ம... மேலும் பார்க்க

இறகுப்பந்து விளையாட்டு: மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

தருமபுரி மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு அணிக்கு வீரா்கள் தோ்வு போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட இறகுப்... மேலும் பார்க்க

அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

பென்னாகரத்தை அடுத்த அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில் மிகவும் பழைமை ... மேலும் பார்க்க