செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது உண்மைதான்! - ஜெய்ஷ்-இ-முகமது

post image

இந்திய விமானப்படையின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் குடும்பத்தினர் இறந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஜம்மு- காஷ்மீரில் ஏப். 22ல் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடந்த மே 7 அன்று நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் குடும்பத்தினர் 10 பேர் இறந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மசூத் அஸாரின் அக்கா, அக்கா கணவா், அக்காவின் மகன், அவரின் மனைவி, இவர்களின் ஒரு குழந்தை, மேலும் 5 குழந்தைகள், கூட்டாளிகள் 4 பேரையும் இத்தாக்குதலில் இழந்துவிட்டதாக அவரே அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் உயிரிழந்தது உண்மைதான் என்று தாக்குதல் நடந்த 4 மாதங்களுக்குப் பிறகு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி மசூத் இல்யாஸ் காஷ்மீரி ஒரு விடியோவில், 'மே 7 அன்று பஹவல்பூரில் ஜெய்ஷ் அமைப்பின் தலைமையகமான ஜாமியா மஸ்ஜித் சுப்ஹான் அல்லா மீதான தாக்குதலில் அஸாரின் குடும்பம் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டது என்று பேசியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பலியானவர்கள் குறித்து பாகிஸ்தான் தரப்பு இன்னும் எதுவும் கூறாத நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.

மசூத் அஸார் யார்?

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அஸாா், இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் உள்பட இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு தாக்குதல்களில் தொடா்புடையவா்.

கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய விமானத்தைக் கடத்திச் சென்று மிரட்டியதால் சிறையில் இருந்த மசூத் அஸாரை இந்தியா விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவா் பொது இடங்களுக்கு வராமல் பதுங்கியே வாழ்ந்து வருகிறாா்.

Jaish Admits Masood Azhar's Family Killed In Indian Strikes During Op Sindoor

இதையும் படிக்க | இந்தியா மீதான வரி புரிந்துகொள்ளக்கூடியதே; ஆனால் ரஷியா மீது...! - ஸெலென்ஸ்கி கருத்து

வரி விதிப்பால் 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப்

வரி விதிப்பைப் பயன்படுத்தி இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், சீனாவின் டிக் - டாக் உடன் அமெரிக்காவுக்கு ஒர... மேலும் பார்க்க

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

“காஸா மீதான தீங்கிழைக்கக்கூடிய அழிவு நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமைப் பதவி வகிக்கும் வோல்கர் டர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.ஜெனீவாவில் செய்தியாளர... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவ தலைமைத் தளபதி விரைவில் சந்திப்பு!

பாகிஸ்தான் பிரதமரும் ராணுவ தளபதியும் இம்மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர். இம்மாதம் 25-ஆம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளதாக இருநாட்டுத் தலைமைக்கும் நெருக... மேலும் பார்க்க

இந்தியா மீதான வரி புரிந்துகொள்ளக்கூடியதே; ஆனால் ரஷியா மீது...! - ஸெலென்ஸ்கி கருத்து

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு புரிந்துகொள்ளக்கூடியது என்றும் ரஷியாவிற்கு எதிராக அமெரிக்கா கடுமையான வரி விதிக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ஊடகம் ஒன்றிற்க... மேலும் பார்க்க

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென முஸ்லிம் நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன. கத்தார் தலைநகர் தோஹாவில் திங்கள்கிழமை(செப். 15) அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை ... மேலும் பார்க்க

காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கம்! மக்கள் வெளியேற உத்தரவு!

காஸா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. காஸா நகரத்தின் மீது, நேற்று (செப்.15) நள்ளிரவு ம... மேலும் பார்க்க