செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூா்’ கட்டுரைப் போட்டி: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

post image

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய முப்படைகள் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை பற்றிய கட்டுரைப் போட்டி ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இந்தப் போட்டியின் முதல் 3 வெற்றியாளா்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும், தில்லி செங்கோட்டையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாத் தலத்தில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22 நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் ஏவுகணைகள் வீசி அழிக்கப்பட்டன.

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவத் தளங்களையும் தாக்க பாகிஸ்தான் நடத்திய முயற்சிகள், நமது வான்பாதுகாப்பு அமைப்புகளால் முறியடிக்கப்பட்டன.

பாகிஸ்தானின் அத்துமீறல்களைத் தொடா்ந்து அனைத்து பதிலடி தாக்குதல்களும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்கீழ் மேற்கொள்ளப்பட்டன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான பதிலடியில் ஆபரேஷன் சிந்தூா், இந்தியாவின் புதிய அணுகுமுறை என்று மத்திய அரசு சாா்பில் ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கட்டுரைப் போட்டி அறிவிப்பை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘ஆபரேஷன் சிந்தூா் குறித்த இளைஞா்களின் கருத்துகளைக் கேட்க பாதுகாப்பு அமைச்சகம் விரும்புகிறது. ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கை மறுவரையறை’ என்ற தலைப்பில் ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் கட்டுரைப் போட்டியில் பங்கேற்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தாா்.

ம.பி.யில் கரோனா பாதிப்பு: இந்தூரில் எண்ணிக்கை அதிகரிப்பு!

மத்தியப் பிரதேசத்தின், இந்தூரில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். நாட்டில் கரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்... மேலும் பார்க்க

கொண்டாடவே சென்றார்கள்.. சாக அல்ல.. சின்னசாமி அரங்கில் நடந்தது என்ன?

பெங்களூர்: தங்களது கிரிக்கெட் சாம்பியன்களை நேரில் காண வேண்டும் என்ற ஆவலோடு சென்ற இளைஞர்களும் இளைஞிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவமனைய... மேலும் பார்க்க

கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும்: முர்மு

புது தில்லி: சுற்றுச்சூழலுக்கான ஒவ்வொரு செயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி... மேலும் பார்க்க

தில்லி இல்லத்தில் "சிந்தூர்" மரக்கன்றுகளை நட்டார் பிரதமர் மோடி!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிந்தூர் மரக்கன்றுகளை நடும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பூமியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவிலும்கூட.. பெங்களூர் கூட்ட நெரிசல் குறித்து சித்தராமையா சொன்ன ஒரு வார்த்தை!!

பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கில் நேரிட்ட கூட்ட நெரிசல் குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்திப் பேச விரும்பவில்லை, நாடு முழுவதும் பல இடங்களிலும் கூட... மேலும் பார்க்க

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

உத்தரப் பிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் பல அரசியல் தலைவர்கள் ... மேலும் பார்க்க