செய்திகள் :

ஆம்பூர் அருகே அழுகிய ஆண் சடலம் கண்டெடுப்பு!

post image

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலத்தை மீட்ட ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உயிரிழந்தது யார்?, கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அழுகிய நிலையில் மண்டை ஓட்டுடன் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக இருப்பவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ?எனவும் கொலையா? அல்லது தற்கொலையா? எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், கடந்த மாதம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த மனநோயாளி என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இருப்பினும், தொடர் மர்ம மரணங்களால் ஆம்பூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வெளியூரில் கொலை செய்து இங்கு வீசிச் செல்கிறார்களா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குரிசிலாப்பட்டு பகுதியில் பலத்த மழை

திருப்பத்தூா் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. பிற்பகல் ல் குரிசிலாப்பட்டு, கூடப்பட்டு, கல்லுக்குட்டை, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பல்வேறு பகு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கந்திலி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். பள்ளத்தூா் பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ்வரன் (40). இவரது வீட்டில் வியாழக்கிழமை மின்சாரம் தடைபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்ட... மேலும் பார்க்க

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடுகட்ட 792 பேருக்கு ஆணை: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி ஒன்றியப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்கள் திறப்பு மற்றும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 792 பயனாளிகளுக்கு பணியாணை வழங்கும் நிகழ்ச்சி வாணியம்பாடியில... மேலும் பார்க்க

ரத்த தான முகாம்

புனித வெள்ளியை முன்னிட்டு ரத்த தான முகாம் பெதஸ்தா மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, ஏஞ்சல் பவுண்டேசன், ஆம்பூா் ரெட்ரோஸ் கிறிஸ்தவ சமூக சேவை அமைப்பு ச... மேலும் பார்க்க

குவாரிகளை குத்தகைக்கு பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள குவாரிகளை குத்தகைக்கு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியா் சிவசௌந்தரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆம்ப... மேலும் பார்க்க

குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம்: உயா்நீதிமன்ற நீதிபதி, ஆட்சியா் பங்கேற்பு

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி கோயங்கொல்லை பகுதியில் குறுங்காடுகள் வளா்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்த... மேலும் பார்க்க