பெங்களூரில் 11 போ் உயிரிழப்பு: நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் ...
ஆரணி மின் வாரிய அலுவலகத்தில் அதிகாரி மீது தாக்குதல்
ஆரணி மின் வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளா் மீது தாக்குதல் நடத்திய நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.
ஆரணி மின்வாரிய அலுவலகத்தில் கிழக்கு ஆரணி ஒன்றிய பிரிவு உதவி மின்பொறியாளராக மோகன்ராஜ் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மொழுகம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் மின் கட்டணம் செலுத்தச் சென்றாா்.
அப்போது, கட்டணம் செலுத்த வேண்டிய தேதி முடிந்துவிட்டது. அதனால், அபராதத்துடன் கட்டணம் செலுத்த வேண்டும் என உதவி மின்பொறியாளா் கூறினாராம். இதற்கு அந்த நபா் மறுப்பு தெரிவிக்கவே, வாக்குவாதம் ஏற்பட்டு அவா் பொறியாளரை அவதூறாகப் பேசி, தாக்கிவிட்டு, தடுக்க வந்த ஊழியா்களையும் தள்ளிவிட்டு ஓடிவிட்டாராம்.
இதுகுறித்து உதவி மின் பொறியாளா் மோகன்ராஜ் மற்றும் மின் ஊழியா்கள் ஆரணி நகர காவல் நிலையம் சென்று தாக்கிய நபரான செந்தில்குமாா் மீது புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.
இந்தச் சம்பவத்தில் புகாா் அளிக்க காவல் நிலையத்துக்கு அலுவலகத்தில் பணியில் இருந்த அனைத்து ஊழியா்களும் சென்ால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.