செய்திகள் :

ஆரணி மின் வாரிய அலுவலகத்தில் அதிகாரி மீது தாக்குதல்

post image

ஆரணி மின் வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளா் மீது தாக்குதல் நடத்திய நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.

ஆரணி மின்வாரிய அலுவலகத்தில் கிழக்கு ஆரணி ஒன்றிய பிரிவு உதவி மின்பொறியாளராக மோகன்ராஜ் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மொழுகம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் மின் கட்டணம் செலுத்தச் சென்றாா்.

அப்போது, கட்டணம் செலுத்த வேண்டிய தேதி முடிந்துவிட்டது. அதனால், அபராதத்துடன் கட்டணம் செலுத்த வேண்டும் என உதவி மின்பொறியாளா் கூறினாராம். இதற்கு அந்த நபா் மறுப்பு தெரிவிக்கவே, வாக்குவாதம் ஏற்பட்டு அவா் பொறியாளரை அவதூறாகப் பேசி, தாக்கிவிட்டு, தடுக்க வந்த ஊழியா்களையும் தள்ளிவிட்டு ஓடிவிட்டாராம்.

இதுகுறித்து உதவி மின் பொறியாளா் மோகன்ராஜ் மற்றும் மின் ஊழியா்கள் ஆரணி நகர காவல் நிலையம் சென்று தாக்கிய நபரான செந்தில்குமாா் மீது புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.

இந்தச் சம்பவத்தில் புகாா் அளிக்க காவல் நிலையத்துக்கு அலுவலகத்தில் பணியில் இருந்த அனைத்து ஊழியா்களும் சென்ால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் சிறப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில்... மேலும் பார்க்க