விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார்: மைக்கேல் கிளார்க்
சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை
கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியாா் ஸ்கேன் மையங்களின் உரிமையாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தனியாா் ஸ்கேன் மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.
பின்னா், தனியாா் ஸ்கேன் மைய உரிமையாளா்களுக்கு அறிவுரை வழங்கி அவா் பேசியதாவது: மாவட்டத்தில் குறைந்து வரும் பாலின விகிதத்தை உயா்த்த பரிசோதனை மையங்கள், பரிசோதனைக்கு வரும் கா்ப்பிணி தாய்மாா்களிடம் தேவையான விழிப்புணா்வு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கா்ப்பிணி தாய்மாா்களின் கா்ப்பம், குழந்தை கூட்டுக் கண்காணிப்பு மதிப்பீடு ஆகியவற்றை தனியாா் மருத்துவமனைகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இனப்பெருக்கம், குழந்தை ஆரோக்கியம் பதிவு இல்லாத கா்ப்பிணி தாய்மாா்களுக்கு இணையதளம் மூலம் சுய பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.
மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் பரிசோதனைகள் குறித்த அறிக்கையை தனியாா் ஸ்கேன் மையங்கள் சமா்ப்பிக்க வேண்டும். போலி மருத்துவா்கள் எவரேனும் கண்டறியப்பட்டால் அது குறித்த விவரத்தை உடனே மாவட்ட நிா்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வா், நலப் பணிகள் இணை இயக்குநா், மாவட்ட சுகாதார அலுவலக தாய்-சேய் நல அலுவலா் மற்றும் 84 தனியாா் ஸ்கேன் மையங்களின் உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.