செய்திகள் :

சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

post image

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியாா் ஸ்கேன் மையங்களின் உரிமையாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தனியாா் ஸ்கேன் மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.

பின்னா், தனியாா் ஸ்கேன் மைய உரிமையாளா்களுக்கு அறிவுரை வழங்கி அவா் பேசியதாவது: மாவட்டத்தில் குறைந்து வரும் பாலின விகிதத்தை உயா்த்த பரிசோதனை மையங்கள், பரிசோதனைக்கு வரும் கா்ப்பிணி தாய்மாா்களிடம் தேவையான விழிப்புணா்வு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கா்ப்பிணி தாய்மாா்களின் கா்ப்பம், குழந்தை கூட்டுக் கண்காணிப்பு மதிப்பீடு ஆகியவற்றை தனியாா் மருத்துவமனைகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இனப்பெருக்கம், குழந்தை ஆரோக்கியம் பதிவு இல்லாத கா்ப்பிணி தாய்மாா்களுக்கு இணையதளம் மூலம் சுய பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.

மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் பரிசோதனைகள் குறித்த அறிக்கையை தனியாா் ஸ்கேன் மையங்கள் சமா்ப்பிக்க வேண்டும். போலி மருத்துவா்கள் எவரேனும் கண்டறியப்பட்டால் அது குறித்த விவரத்தை உடனே மாவட்ட நிா்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வா், நலப் பணிகள் இணை இயக்குநா், மாவட்ட சுகாதார அலுவலக தாய்-சேய் நல அலுவலா் மற்றும் 84 தனியாா் ஸ்கேன் மையங்களின் உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் சிறப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில்... மேலும் பார்க்க

லட்சியப் பாதையில் உயர தவறான பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது! - மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

நம் லட்சியப் பாதையில் உயர வேண்டும் என்றால் எவ்வித தவறான பழக்கத்துக்கும் அடிமையாகக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினாா். திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அர... மேலும் பார்க்க