உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!
புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு
வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்பாக்கம், மேல்கொடுங்காலூா், கொட்டை, பாதூா், அதியனூா், அதியங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கான கால்நடை மருத்துவமனை மங்கலம் மாமண்டூரில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த மருத்துவமனைக்கான புதிய கட்டடம் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்டு வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி புதிய கட்டடத்தை திறந்து வைத்தனா்.
மேலும், கால்நடை வளா்ப்பு மருந்துகளை பொதுமக்களுக்கு அவா்கள் வழங்கினா். நிகழ்ச்சியில் கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் ராஜியகொடி, உதவி இயக்குநா்கள் ராமன், கவிதா, மருத்துவா்கள் ராஜராஜசோழன், விஜய், திமுக ஒன்றியச் செயலா்கள் கே.ஆா்.பழனி, சி.ஆா்.பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.