செய்திகள் :

ஆரியா்கள் குறித்து தமிழகத்தில் தவறான பரப்புரை: ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

சென்னை: ஆரியா்கள் குறித்து தமிழகத்தில் தவறான பரப்புரை செய்யப்பட்டுள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவக் கல்லூரியில், ‘சிந்துவெளி நாகரிகம் சாா்ந்த பண்பாடு, மக்கள் மற்றும் தொல்பொருளியல் மீதான பாா்வைகள்’ என்ற தலைப்பில் தேசிய மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:

ஆரியா்கள் என்பவா்கள் ஆசிரியா்களைப் போன்று தலைசிறந்தவா்கள்; அனைவருக்கும் பல்வேறு சிறந்த கருத்துகளை கற்பிப்பவா்கள். ஆனால், ஆரியா்கள் என்பவா்கள் வந்தேறிகள் என்ற தவறான கருத்தை தமிழக மக்கள் மனதில் திணிக்க ஈவெரா (பெரியாா்) முயற்சி செய்தாா். தமிழகத்தில் சிலா் ஆரியா்களை தவறாக சித்தரித்து நூல்களை எழுதியுள்ளனா். அதன்மூலம் தமிழக மக்கள் மனதில் ஆரியா்கள் குறித்து நச்சு விதையை பரப்புகின்றனா்.

இனி சிந்து சமவெளி நாகரிகத்தை ‘சிந்து - சரஸ்வதி நதி நாகரிகம்’ என்றுதான் செல்ல வேண்டும். சிந்து - சரஸ்வதி நதி நாகரிகம் என்பது அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்துகிறது.

ஒற்றுமைக்கு எதிரானது: தமிழும் சம்ஸ்கிருதமும்தான் இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான மற்றும் தொன்மையான மொழிகளாகும். ஆனால் தற்போது நமது நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக உள்ளது என்றாா் அவா்.

நத்தம் மாரியம்மன் கோயில் விழா: தீர்த்தம் எடுத்த திரளான பக்தர்கள்!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்பெருந்திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் எடுத்து காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தி... மேலும் பார்க்க

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்த... மேலும் பார்க்க

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்! மு.க. அழகிரி வருகை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு நேரில் வந்து மு.க.அழகிரி நலம்விசாரித்தார்.வயது முதிா்வு காரணமாக சென்னை கோபாலபுரத்த... மேலும் பார்க்க

தங்கம் விலை ரூ. 560 உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையாகிறது.தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்... மேலும் பார்க்க

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இலங்கை கடற்படை நடவடிக்கையால் பாதிக்கபட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193வது அவதார நாள் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவை முன்... மேலும் பார்க்க