செய்திகள் :

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு: ஆந்திர முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து!

post image

ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டு நிறைவு செய்துள்ளதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு, மத்திய அரசு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. மேலும், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தே.ஜ. கூட்டணியில் உள்ள ஆந்திரப் பிரதேச அரசின் முதல்வர் சந்திர பாபு நாயுடு, அவசர காலங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மனிதாபிமான உதவிகளைச் செய்வதாகக் குறிப்பிட்டு, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இத்துடன், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், சுதந்திரப் போராட்டம் முதல் இயற்கை பேரிடர் ஆகிய அனைத்து சூழ்நிலைகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டுக்கான சேவைகளைச் செய்து வருவதாகப் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னதாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை ஆகியவை அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu and Deputy Chief Minister Pawan Kalyan have congratulated the RSS on completing its centenary.

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி, அடுத்த வாரம் இந்தியா வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டில், கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேற... மேலும் பார்க்க

அக்.26 முதல்..! 5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை!

இந்தியா - சீனா இடையே கடந்த 5 ஆண்டுகளாக நீடித்த பதற்றங்களுக்குப் பின்னர் முதல் முறையாக வருகிற 26 ஆம் தேதி நேரடி விமான சேவை துவங்கப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.சீன... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 103 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில், இன்று (அக். 2) ஒரே நாளில் 103 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று 103 மாவோயிஸ்டுகள், சத்தீஸ்கர் கா... மேலும் பார்க்க

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

பிரபல பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது மேலாளர் மற்றும் விழா ஏற்பாட்டாளர் மீது அசாம் காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல அசாமிய ப... மேலும் பார்க்க

அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

ஜனநாயகம் மீதான தாக்குதல் நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என கொலம்பியாவில் நடைபெற்ற விழாவில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி கொலம்பியாவில்... மேலும் பார்க்க

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

உத்தரப் பிரதேசத்தில், தசரா பண்டிகையை முன்னிட்டு பரேலி பிரிவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 48 மணிநேரத்துக்கு இணைய சேவைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. பரேலி பிரிவில் உள்ள 4 மாவட்டங்களி... மேலும் பார்க்க