செய்திகள் :

ஆர்டிஐ-ன் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டு வரக் கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணை!

post image

அரசியல் கட்சிகளை ஆர்டிஐ-ன் கீழ் கொண்டுவர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கொண்டுவர உத்தரவிடக் கோரி, தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் மீதான விசாரணையை வருகிற ஏப்ரல் 21 அன்று முதல் விசாரிக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று (பிப். 14) தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் தங்களின் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ஏப்ரல் 21 அன்று தொடங்கும் வாரத்தில் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

இதையும் படிக்க | விதிமுறைகளை மீறியதாக வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

தேசிய, மாநில அரசியல் கட்சிகளை ஆர்டிஐ சட்டத்தின்படி பொது அதிகாரத்தின் கீழ் உச்சநீதிமன்றம் அறிவிக்கக் கோரி மனுதாரர்களான ஜனநாயக சீர்திருத்த சங்கம், வழக்குரைஞர் அஸ்வினி குமார் மற்றும் பலரும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் காங்கிரஸ், பாஜக மற்றும் பல கட்சிகள் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, மத்திய அரசு மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கொண்டுவர கோரிக்கை வைத்து ரிட் மனு பெற முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது.

அரசியலமைப்பு முழுவதும் அரசியல் கட்சிகளைச் சுற்றியே உள்ளது என்பதை உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் உபாத்யாய் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிக்க | 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளது: அமித் ஷா!

"அரசியல் கட்சிகள் தொடர்ந்து பொதுக் கடமைகளைச் செய்வதில் ஈடுபட்டுள்ளன. பொது நலனுக்காக அரசியல் கட்சிகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் அவசியம். எனவே, ஆர்டிஐ சட்டத்தின் பிரிவு 2(ஹெச்)-ன் படி பொது அதிகாரத்தின் கீழ் அவற்றைக் கொண்டுவரவேண்டும்” என்று மனுவில் உபாத்யாய் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29ஏ-ன் கீழ் ஒரு சங்கம் அல்லது தனிநபர் அமைப்பு இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் ஒரு அரசியல் கட்சியின் அந்தஸ்தைப் பெறுகிறது.

கோவளம் கடலில் அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலி

கோவளம் கடலில் 75 வயது அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலியானதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.விழிஞ்சம் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நண்பர்களுடன் விடுமுறைக்கு வந்திருந்த பெண், க... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு கிட... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் காசி ... மேலும் பார்க்க

ராகுல் காந்தியுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தியுடன் அவர் விவாதித்ததாக அதிகாரப்ப... மேலும் பார்க்க

கும்பமேளாவில் நீராடிய மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான்!

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான் தனது குடும்பத்தினருடன் நீராடினார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் நகரில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் இரண்டு பாதசாரிகள் பலியானதாக காவல்துறை அதிகாரி... மேலும் பார்க்க