செய்திகள் :

ஆர்மினியா செஸ் தொடரில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்!; நூலிழையில் தவறவிட்ட பிரக்ஞானந்தா

post image

ஆர்மீனியா நாட்டின் ஜெர்முக்கில் கடந்த மே 29-ம் தேதி, 6-வது ஸ்டீபன் அவக்யான் நினைவு செஸ் தொடர் (Stepan Avagyan Memorial chess tournament) தொடங்கியது.

இதில், இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த 10 வீரர்கள் பங்கேற்றனர்.

ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற இத்தொடரில், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதிச் சுற்றில் (ஜூன் 6) ஆர்மீனியா கிராண்ட் மாஸ்டர் ஆராம் ஹகோபியனை அரவிந்த் சிதம்பரமும், மறுமுனையில் ஆர்மீனியாவின் மற்றொரு கிராண்ட் மாஸ்டர் ராபர்ட் ஹோவன்னிசியனை பிரக்ஞானந்தாவும் எதிர்கொண்டனர்.

இதில், இந்திய வீரர்கள் இருவருமே வெற்றிபெறவே, 9 சுற்றுகள் முடிவில் இருவரும் சமமாக 6.5 புள்ளிகளைப் பெற்றனர்.

இதனால், சோன்போர்ன்-பெர்கர் டைபிரேக் முறையில் வெற்றியாளரை முடிவுசெய்யும் சூழல் உருவானது.

அதன்படி, முந்தைய சுற்றுகளில் உயர் தரவரிசையிலுள்ள வீரர்களுக்கெதிராக சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் அரவிந்த் சிதம்பரம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அரவிந்த் சிதம்பரம்
அரவிந்த் சிதம்பரம்

இந்தத் தொடரில் அரவிந்த் சிதம்பரம் 9 சுற்றுகளில், தோல்வியே காணாமல் 5 சுற்றுகளை டிரா செய்து, 4 சுற்றுகளில் வெற்றி பெற்றிருந்தார்.

குறிப்பாக, டென்மார்க்கின் ஜோனாஸ் புல் பிஜெர்ரேவுக்கு எதிரான 4-வது சுற்றிலும், ஹங்கேரியின் பெஞ்சமின் க்ளெடுராவுக்கு எதிரான 8-வது சுற்றிலும் துல்லியமான நகர்வுகளால் அரவிந்த் சிதம்பரம் வெற்றிபெற்றார்.

அரவிந்த் சிதம்பரம் ஏற்கெனவே இந்த ஆண்டில் ப்ராக் செஸ் விழா மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஸ்ட்ராபெரி விவசாயி, யூடியூபர், திரிணாமுல் காங் எம்.பி..!' - அந்த 2011 டீம் இப்போ என்ன பண்றாங்க?

'பியூஷ் சாவ்லா ஓய்வு!'பியூஷ் சாவ்லா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கிரிக்கெட் ரசிகர்களை பொறுத்தவரைக்கும் இது ஒரு 'சிவாஜி செத்துட்டாரா...' மொமண்ட்தான்.... மேலும் பார்க்க

Gukesh - Magnus Carlsen: சாதனையைத் தவறவிட்ட குகேஷ்; 1.5 புள்ளி வித்தியாசத்தில் கார்ல்சன் சாம்பியன்!

நார்வே செஸ் தொடர் கடந்த மே 26-ம் தேதி தொடங்கியது. இத்தொடரில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன், உலக செஸ் சாம்பியன் குகேஸ், மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்டோர் கலந... மேலும் பார்க்க

TNPL 2025: நம்ம விஜய் சங்கரா இது... பேட்டிங், பௌலிங்கில் அசத்தல்; திருப்பூரை வீழ்த்திய சேப்பாக்!

கோவையில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2025 சீஸன் இரண்டாவது போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் நேற்று இரவு மோதினார்கள். திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. முத... மேலும் பார்க்க

RCB : 'மது கம்பெனியை விளம்பரப்படுத்ததான் டீமை வாங்கினேன்!'- விஜய் மல்லையா சொல்லும் RCB கதை

'விஜய் மல்லையா பேட்டி...'பிரபல தொழிலதிபரும் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுபவருமான விஜய் மல்லையா 'ராஜ் சமானி' (Raj Shamani) என்பவரின் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருக்க... மேலும் பார்க்க

Preity Zinta : 'நீங்க இல்லாம நாங்க இல்ல...' - நெகிழும் ப்ரீத்தி ஜிந்தா

நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருந்தது. இந்நிலையில், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா அந்த அணியின் வீரர்கள் பற்றியும் ரசி... மேலும் பார்க்க

IPL : 'இளம் வீரர்களுக்கு எதற்கு அத்தனை கோடிகள்?' - கவாஸ்கர் காட்டம்!

ஐ.பி.எல் இல் ஆடும் இளம் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுப்பது பெரிய பலனை அளிப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.... மேலும் பார்க்க