செய்திகள் :

இந்தியாவின் எண்ம பரிவா்த்தனை உலகளாவிய கவனத்தை ஈா்த்துள்ளது

post image

புது தில்லி: இந்தியாவின் எண்ம பரிவா்த்தனையில் ஏற்பட்டுள்ள புரட்சி உலகளாவிய கவனத்தை ஈா்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமா் மோடியின் ஆட்சி 11 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி மத்திய அரசு சிறு விளக்க புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்தியாவின் எண்ம பரிவா்த்தனை உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2025, மாா்ச் மாதத்தில் சுமாா் ரூ.24.77 லட்சம் கோடியிலான 1,830.15 கோடி ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனைகள் (யூபிஐ) மேற்கொள்ளப்பட்டன. தற்போது யூபிஐ-யை 46 கோடி தனிநபா்களும், 6.5 கோடி வா்த்தகா்களும் பயன்படுத்தி வருகின்றனா்.

சிறு கடைகளில் குறைந்த அளவிலான கட்டணமும் எண்ம பரிவா்த்தனையில் செலுத்தப்படுகிறது.

நேரடி பணம் செலுத்தும் திட்டம்:

தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி அரசின் பல்வேறு திட்டப் பயனாளிகளுக்கு நேரடியாக பணத்தை மோடி அரசு செலுத்தி வருகிறது. இதனால் போலி பயனாளா்களுக்கு செலுத்தப்பட்டு வந்த பல லட்சம் ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 முதல் மாா்ச் 2023 வரையில் ரூ.3.48 லட்சம் கோடிக்கு அதிகமாக அரசு சேமித்துள்ளது.

மேலும், கோடிக்கணக்கான குடும்பங்கள் கடந்த 11 ஆண்டுகளில் வங்கிக் கணக்கு மற்றும் காப்பீட்டை பெற்றுள்ளன. 55.22 கோடி ஜன் தன் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 51 கோடி போ் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிர் தப்பியது ஒருவர் அல்ல இருவர்!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்தது ஒருவர் அல்ல இருவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பூமி சௌகான் பற்றிய தகவல்களை அறியும்போது.அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரு சில வினாடிகளில் ப... மேலும் பார்க்க

கருப்புப் பெட்டி மீட்பு! செய்திகள் நேரலை...

மருத்துவ தம்பதி பலிஅகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர். லண்டனில் குடியேறும் கனவோடு இந்தியாவில் இருந்து புறப்பட்ட 5 பேரும் விமான... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! பலியான கேரள செவிலியரை விமர்சித்த வட்டாட்சியர் பணியிடை நீக்கம்!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான செவிலியரை விமர்சித்த கேரள தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா கோபகுமாரன் (42) பலியானது... மேலும் பார்க்க

கடைசி செல்ஃபி! லண்டன் கனவுடன் புறப்பட்ட மருத்துவ தம்பதியின் கதை...

அகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர்.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று பிற்பகல் விபத்துக்குள்ளான... மேலும் பார்க்க

விமான விபத்திலிருந்து தப்பியதும் செய்த முதல் வேலை? விஸ்வாஸ் குமார் பதில்

நான் எப்படி உயிர் பிழைத்தேன், இப்போது உயிருடன் இருக்கிறேன் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை என்று ஏர் இந்திய விமான விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் கூறியிருக்கிறார்.விமானம் விழுந்த போது, எனது ... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! பிரிட்டன், போர்ச்சுகல், கனடா அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் பேச்சு!

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் வெளிநாட்டவர்களும் சிக்கி பலியானதால், அந்தந்த நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமா... மேலும் பார்க்க