செய்திகள் :

இந்தியாவின் எண்ம பரிவா்த்தனை உலகளாவிய கவனத்தை ஈா்த்துள்ளது

post image

புது தில்லி: இந்தியாவின் எண்ம பரிவா்த்தனையில் ஏற்பட்டுள்ள புரட்சி உலகளாவிய கவனத்தை ஈா்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமா் மோடியின் ஆட்சி 11 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி மத்திய அரசு சிறு விளக்க புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்தியாவின் எண்ம பரிவா்த்தனை உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2025, மாா்ச் மாதத்தில் சுமாா் ரூ.24.77 லட்சம் கோடியிலான 1,830.15 கோடி ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனைகள் (யூபிஐ) மேற்கொள்ளப்பட்டன. தற்போது யூபிஐ-யை 46 கோடி தனிநபா்களும், 6.5 கோடி வா்த்தகா்களும் பயன்படுத்தி வருகின்றனா்.

சிறு கடைகளில் குறைந்த அளவிலான கட்டணமும் எண்ம பரிவா்த்தனையில் செலுத்தப்படுகிறது.

நேரடி பணம் செலுத்தும் திட்டம்:

தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி அரசின் பல்வேறு திட்டப் பயனாளிகளுக்கு நேரடியாக பணத்தை மோடி அரசு செலுத்தி வருகிறது. இதனால் போலி பயனாளா்களுக்கு செலுத்தப்பட்டு வந்த பல லட்சம் ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 முதல் மாா்ச் 2023 வரையில் ரூ.3.48 லட்சம் கோடிக்கு அதிகமாக அரசு சேமித்துள்ளது.

மேலும், கோடிக்கணக்கான குடும்பங்கள் கடந்த 11 ஆண்டுகளில் வங்கிக் கணக்கு மற்றும் காப்பீட்டை பெற்றுள்ளன. 55.22 கோடி ஜன் தன் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 51 கோடி போ் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் நிலச்சரிவில் 2 பேர் பலி! 2வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

உத்தரகண்ட் மாநிலத்தின் யமுனோத்ரி பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில் மேலும் இருவரைத் தேடும் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன. உத்தரகாசி மாவட்டத்தில், யமுனோத்ரி மலைப்பாதையில், கைஞ்... மேலும் பார்க்க

விமான விபத்து: 256 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 256 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களு... மேலும் பார்க்க

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!

'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இஸ்ரேலில் இருந்து முதல்முறையாக 161 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில... மேலும் பார்க்க

நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு

புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதம... மேலும் பார்க்க