செய்திகள் :

இந்தியாவில் சிறுபான்மையினா் அதிருஷ்டசாலிகள்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

post image

இந்தியாவில் சிறுபான்மை மதப்பிரிவினராக இருப்பவா்கள் அதிருஷ்டசாலிகள். ஏனெனில், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அவா்களுக்கான சிறப்பு சலுகைகள் இங்கு உள்ளன என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார நிலையை உயா்த்தும் சிறப்புத் திட்டமான பிரமதா் ஜன விகாஷ் காரியகா்மா திட்டம் தென் பிராந்தியத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது தொடா்பான ஆய்வுக் கூட்டம் திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

இந்தியாவில் சிறுபான்மையினா் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனா் என்ற போலி தோற்றத்தை ஏற்படுத்த ஒரு பிரிவினா் தீவிரமாக முயற்சித்து வருகின்றனா். சில சிறுபான்மையினா் பாரபட்சமாக நடத்தப்படுகிறாா்கள் என்ற வதந்தியைப் பரப்ப முயற்சிக்கின்றனா். ஆனால், உண்மையில் இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பவா்கள் அதிருஷ்டசாலிகள். ஏனெனில், உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்தியாவில் அளிப்பதுபோன்ற சலுகைகள் சிறுபான்மையினருக்கு அளிக்கப்படுவதில்லை.

சிறுபான்மையினருக்கென பல்வேறு சிறப்புத் திட்டங்கள், சலுகைகள் இங்கு உள்ளது. சிறுபான்மையினராக உள்ள நாம் இந்தியக் குடிமகனாக இருப்பதற்காக பெருமைகொள்ள வேண்டும். சிறுபான்மையினராக இல்லாவிட்டால் பல்வேறு சலுகைகள் நமக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

கேரள மக்கள்தொகையில் 44 சதவீதம் போ் கிறிஸ்தவா்களாகவும், முஸ்லிம்களாகவும் உள்ளனா். இதன் மூலம் நாட்டிலேயே சிறுபான்மையினா் அதிகம் வாழும் இடமாகவும் கேரளம் உள்ளது. இதன் காரணமாகவே கேரளத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மத்திய சிறுபான்மை நலத்துறை இணையமைச்சராக கேரளத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் குரியன் பதவி வகித்து வருகிறாா். இது கேரளத்துக்கு மேலும் சாதகமான அம்சமாகும்.

சிறுபான்மையினரின் சமூக-பொருளாதாரத்தை உயா்த்தும் திட்டத்தின் கீழ் கேரளத்தைச் சோ்ந்த சிறுபான்மையினருக்குதான் நாட்டிலேயே மிக அதிகஅளவில் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. பிராந்திய மேம்பாட்டுத் திட்டம், அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு என பல திட்டங்கள் முனைப்புடன் நிறைவேற்றப்படுகின்றன என்றாா்.

பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர்!

பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் வைக்கப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்... மேலும் பார்க்க

காஷ்மீரில் 3 மாத விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!

காஷ்மீரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த காஷ்மீரில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.காஷ்மீரில் நிலவிவந்த அதீத குளிர் காரணமாக கடந்த மூன்று மாதங்களாகப் பள்ளிகளுக்குக் குளிர்கால... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை தீர 5 வயது சிறுமியைப் பலியிட்ட தம்பதி: கோவாவில் அதிர்ச்சி!

கோவாவில் அண்டை வீட்டைச் சேர்ந்த 5 வயது சிறுமியைக் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவாவில் வசித்துவருபவர் பாபாசாகேப் அலார்(52) அவரது மனைவி பூஜா(45). தம்பதியினர் மந்த... மேலும் பார்க்க

பிரதமரின் நிகழ்ச்சிக்கு முதல்முறையாக பாதுகாப்புப் பணியில் முழுவதும் பெண்கள்!

முதல்முறையாக பிரதமர் மோடி கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு முழுவதுமாக பாதுகாப்புப் பணியில் பெண்கள் ஈடுபடவுள்ளனர். உலக மகளிர் நாளையொட்டி குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தில் நாளை(மார்ச் 8) நடைபெறும் விழ... மேலும் பார்க்க

ஒருநாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு: எல்&டி நிறுவனம் அறிவிப்பு!

பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு வழங்கவிருப்பதாக எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.லார்சன் & டூப்ரோ நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு மாதத்தி... மேலும் பார்க்க

பறவைக் காய்ச்சல் பாதிப்பு: கோழிக்கறி, முட்டை சாப்பிடலாமா?

நமது அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோழிக்கறி, முட்டை சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.அதாவது, பறவ... மேலும் பார்க்க