செய்திகள் :

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம்!

post image

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கும் நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுக்கும் இடையேயான சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் இரு நாடுகளும் விரிவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் நியூசிலாந்தின் வர்த்தக, முதலீட்டு அமைச்சர் டோட் மெக்லே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது இது முடிவு செய்யப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான ஒத்துழைப்புக்கு இது அடித்தளம் அமைத்துள்ளது.

இது குறித்து அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

இருதரப்பு வளர்ச்சி மற்றும் நாட்டின் வளத்தை உறுதிப்படுத்தும் வகையில் நியூசிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் தொழில் துறை மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகளையும், நுகர்வோரையும் பெற இயலும். அதுவே இப்பேச்சுவார்த்தையின் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | வாழ்க்கையின் நோக்கத்தை அறிய உதவியது ஆர்.எஸ்.எஸ்: மோடி

இதையும் படிக்க | சொல்லப் போனால்... மும்மொழியும் செம்மொழியும் வேண்டாத ஆணியும்!

மோசடி கடவுச்சீட்டில் இந்தியாவினுள் நுழைந்தால் 7 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம்!

மோசடி கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அல்லது நுழைவு இசைவு (விசா) மூலமாக இந்தியாவினுள் நுழையும் வெளிநாட்டினருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: மாதா வைஷ்ணவி தேவி கோயில் நன்கொடை 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் (ஜனவரி வரை) ரூ.171.90 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாகக் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2020-21-ஆம் நி... மேலும் பார்க்க

காற்று மாசு அதிகமுள்ள 5-ஆவது நாடு இந்தியா: மத்திய அரசு மீது காங்கிரஸ் விமா்சனம்!

உலக அளவில் காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு, மத்திய அரசை காங்கிரஸ் விமா்சித்துள்ளது. ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த காற்றின் தரக் குறியீடு தொழில்நுட்... மேலும் பார்க்க

ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை!

கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளதாக அந்த அறக்கட்டளையின் செயலா் சம்பத் ராய் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: கடந்த... மேலும் பார்க்க

இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்! -பிரதமா் மோடி

‘இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்; இப்போட்டி மோதலாக உருவெடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல தொகுப்பாளரும், கணினி அறிவியலா... மேலும் பார்க்க

போதைப் பொருள் கும்பல்கள் மீது தயவு தாட்சண்யம் கிடையாது! -அமித் ஷா உறுதி

போதைப் பொருள் கும்பல்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்தாா். மணிப்பூா், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் ரூ.88 கோடி மதிப்பி... மேலும் பார்க்க