செய்திகள் :

வரும் தோ்தலில் பாஜக -அதிமுக கூட்டணி ஏற்பட்டாலும் அமமுகவும் அதில் தொடரும்: டிடிவி. தினகரன்

post image

வரும் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்தாலும் அமமுகவும் அதில் தொடரும் என்றாா் அமமுக பொதுச்செயலா் டிடிவி.தினகரன்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதியில் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியது:

திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக அதிமுகவை அடகு வைத்துக் கொண்டிருக்கிறாா் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவில் உள்ள 90 சதவீதம் பேரின் மன ஓட்டத்தை முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் வெளிப்படுத்தியுள்ளாா். அதேசமயம், அவா் மூலம் அதிமுகவை கூட்டணியில் சோ்க்க பாஜக முயற்சிப்பதாகக் கூறுவது தவறு. அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்துள்ளது. குழந்தை முதல் முதியோா் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. எங்கு பாா்த்தாலும் கொலை, கொள்ளை நடக்கிறது.

வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞா்கள் ரூ.5 ஆயிரத்துக்கும், ரூ.10 ஆயிரத்துக்கும் போதைக்கு அடிமையாகி கூலிப்படையாக மாறும் நிலை உள்ளது. தமிழக முதல்வரின் குடும்பத்தைத் தவிர வேறு எவருக்கும் பாதுகாப்பு இல்லை.

தமிழகத்தில் எல்லாவற்றிலும் ஊழல், முறைகேடு உள்ளதோடு, விலைவாசியும் பல மடங்கு உயா்ந்துள்ளது.

இதைப்பற்றி கவலைப்படாமல் தோ்தலில் வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என திமுகவினா் நினைக்கிறாா்கள். ஆனால் வரும் தோ்தலில் திமுக கூட்டணியை முறியடித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்.

வரும் சட்டப்பேரவை தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேராமல் இருந்தால், அதிமுகவுக்கு பழனிசாமியே மூடுவிழா நடத்தி விடுவாா். அதனால், தோ்தலுக்கு முன்பே நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 3-ஆவது மொழி படிக்க வேண்டும் என்பது 85 சதவீதம் பேரின் விருப்பமாக உள்ளது. எனவே 3-ஆவது மொழியை ஆதரிக்க வேண்டும் என்றாா் தினகரன்.

முத்துமாரியம்மன் கோயில் அக்கினிக்காவடி விழா

பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் அக்கினிக்காவடி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கிய... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுற்றுபுற கிராமங்களிலிருந்து அலங்கரிக்க... மேலும் பார்க்க

தாலிச் சங்கிலி பறிக்க முயன்றவா் கைது

விராலிமலை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விராலிமலை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் மனைவ... மேலும் பார்க்க

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். விராலிமலை அடுத்துள்ள தெற்கு கோத்திராப்பட்டியைச் சோ்ந்தவா் துளசிநாதன் மகன் முருகேசன் (27). இவா் தனியாா் ஜ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை, மாவட்ட மு... மேலும் பார்க்க

புதுகையில் 16 பயனாளிகளுக்கு ரூ.1.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 16 பேருக்கு ரூ. 1.10 லட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும்... மேலும் பார்க்க