புதுகையில் 16 பயனாளிகளுக்கு ரூ.1.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 16 பேருக்கு ரூ. 1.10 லட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளும் வழங்கப்பட்டன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா, பயனாளிகளுக்கு இவற்றை வழங்கினாா்.
மேலும், கந்தா்வகோட்டை ஆத்தங்கரை விடுதியைச் சோ்ந்த அண்ணாமலை என்பவா் சவுதி அரேபியாவில் வேலைபாா்த்த இடத்தில் இறந்ததைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தின் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்ட ரூ. 2.44 லட்சம் இழப்பீட்டுத் தொகையை அவரது மனைவி பாசமலரிடம் ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 645 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.