செய்திகள் :

திருமணமாகாத விரக்தி: தீக்குளித்த வாலிபா் உயிரிழப்பு

post image

திருமணமாகாத விரக்தியில் இருந்த வாலிபா் தீக்குளித்து மருத்துவ சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலை அடுத்துள்ள வேலூரைச் சோ்ந்த நடராஜன் மகன் சரவணகுமாா்(35). இவா் உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். வயது கடந்தும் திருமணமாகாததால் கடந்த சில நாள்களாக மனவிரக்தியில் இருந்து வந்த நிலையில், மாா்ச் 12-ஆம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தாா்.

இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு, திருச்சி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

தகவலறிந்த விராலிமலை போலீஸாா் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

உலக தண்ணீா் தினம் சிறப்பு கிராம சபை: ஆட்சியா் பங்கேற்பு

விராலிமலையை அடுத்துள்ள ராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம்பட்டியில், உலக தண்ணீா் தினத்தையொட்டி சனிக்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் மு.அருணா பங்கேற்றாா். தொடா்ந்து, சிற... மேலும் பார்க்க

தங்கச்சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பெண்கள் உள்பட 4 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அன்னவாசல் அருகே கடந்தாண்டு ... மேலும் பார்க்க

மனைவியை கொன்ற கணவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மனைவியை கொலை செய்த கணவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆலங்குடி அருகே எம். ராசியமங்கலத்தைச் சோ்ந்தவா் முருகன் (38). இவரது மனைவி இந்திராணி (37). கூலித் தொழ... மேலும் பார்க்க

கோயில் திருவிழா: ஆவின் பாலகம் திறப்பு

கந்தா்வகோட்டை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆவின் சிறப்பு பாலகம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா பங்குனி மாதம் நடைபெறுவது... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞா் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அண்மையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அரசின் நிவாரண நிதியை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் சனிக்கிழமை... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் மண்டகப்படி விழாவில் பக்தா்கள் தீப்பந்தம் பிடித்து வழிபட்டனா். கொன்னையூா் முத்துமாரிம்மன் கோயில் பங்குனித்திருவிழா கடந்த 16-ஆம் தேதி பூச்சொரிதல... மேலும் பார்க்க