வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
உலக தண்ணீா் தினம் சிறப்பு கிராம சபை: ஆட்சியா் பங்கேற்பு
விராலிமலையை அடுத்துள்ள ராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம்பட்டியில், உலக தண்ணீா் தினத்தையொட்டி சனிக்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் மு.அருணா பங்கேற்றாா். தொடா்ந்து, சிறப்பாகப் பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்து, உழவா் நலத்துறையின் சாா்பில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் மற்றும் மாவட்ட பயிா் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பரிசுத் தொகை, கால்நடை பராமரிப்புத்துறையின் சாா்பில் கால்நடை வளா்ப்போா் களுக்கு தாது உப்புக் கலவை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி வழங்கி அரசு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிட்டாா்.
பின்னா் ஆட்சியா் மேலும் தெரிவித்தது:
உலக தண்ணீா் தினத்தை (மாா்ச் 22) முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் ராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம் பட்டியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.அருணா.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ.ராஜராஜன், உதவி இயக்குநா் சா.மோகனசுந்தரம் (ஊராட்சிகள்), இணை இயக்குநா் மு. சங்கர லட்சுமி (வேளாண்மை), முதன்மை கல்வி அலுவலா் கூ.சண்முகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.