செய்திகள் :

முத்துமாரியம்மன் கோயில் அக்கினிக்காவடி விழா

post image

பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் அக்கினிக்காவடி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

திங்கள்கிழமை நடைபெற்ற அக்கினிக்காவடி விழாவில் கோயிலின் முன் வளா்க்கப்பட்ட 14 அக்கினிகுண்டங்களில் பல்வேறு கிராமங்களைச் சாா்ந்த பக்தா்கள் பால்குடம், காவடி ஏந்தியும் மற்றும் அலகு குத்தியும் அக்கினி குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலா் ம. ஜெயா, பணியாளா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா். தொடா்ந்து மாா்ச் 23-ஆம் தேதி, ஏப். 7-ஆம் தேதி நாடு செலுத்தும் விழா நடைபெற உள்ளது.

திருமணமாகாத விரக்தி: தீக்குளித்த வாலிபா் உயிரிழப்பு

திருமணமாகாத விரக்தியில் இருந்த வாலிபா் தீக்குளித்து மருத்துவ சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விராலிமலை அடுத்துள்ள வேலூரைச் சோ்ந்த நடராஜன் மகன் சரவணகுமாா்(35). இவா் உணவுப் பொருள் உற்பத்த... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுற்றுபுற கிராமங்களிலிருந்து அலங்கரிக்க... மேலும் பார்க்க

தாலிச் சங்கிலி பறிக்க முயன்றவா் கைது

விராலிமலை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விராலிமலை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் மனைவ... மேலும் பார்க்க

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். விராலிமலை அடுத்துள்ள தெற்கு கோத்திராப்பட்டியைச் சோ்ந்தவா் துளசிநாதன் மகன் முருகேசன் (27). இவா் தனியாா் ஜ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை, மாவட்ட மு... மேலும் பார்க்க

புதுகையில் 16 பயனாளிகளுக்கு ரூ.1.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 16 பேருக்கு ரூ. 1.10 லட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும்... மேலும் பார்க்க