செய்திகள் :

இந்து அறநிலையத்துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?

post image

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு வனபத்தரகாளியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உபகோயில் மேளம் குழு

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இசைத்துறையில் நன்கு பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஓதுவார்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருப்பதுடன் தேவார பாடசாலையால் வழங்கப்பட்ட 3 ஆண்டு ஓதுவார் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: உபகோயில் எழுத்தர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: பெருக்குபவர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: காவலர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: கூர்க்கா

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: திருவலகு

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: ஏவலர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: சலவைத் தொழிலாளர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: சீட்டு விற்பனையாளர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 1.7.2024 தேதியின்படி 18 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

திருக்கோயிலுக்கு எதிகார வழக்கு தொடர்ந்தவர்கள் மற்றும் இத்துறைக்கு நிலுவைத் தொகை செலுத்த வேண்டியவர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியாற்றவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: கோயில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை பெற்று, தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து உதவி ஆணையர், அருள்மிகு வனபத்தரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையும், கோவை-641 305 என்ற அஞ்சல் முகவரிக்கு ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்னதாகவே கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

மத்திய அரசில் 14,582 பணியிடங்களுக்கு ஜூலை 4 வரை விண்ணப்பிக்க அவகாசம்: எஸ்எஸ்சி

மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கோயம்புத்தூர் பகுதியில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவ... மேலும் பார்க்க

ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

மகாராஷ்ரம் மாநிலம் சந்திராபூரில் உள்ள இந்திய ராணுவ வெடி மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் வெடிப்பொருள்கள், ரசாயனங்கள் அல்லது அபாயகரமான பொருள்களுடன் பணிபுரியக் கூடிய பணிக்கால அடிப்படையிலான ஆபத்து கட்ட... மேலும் பார்க்க

ரூ.71,900 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

தமிழக அரசு மருத்துவத் துறையில் காலியாக உள்ள திறன் உதவியாளர் (Skilled Assistant) பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்த தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு எண்: 08... மேலும் பார்க்க

மாவட்ட சுகாதார மையங்களில் பல்வேறு வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

Recruitment from the Urban Health and Wellness Centre and Siddha at the Government Medical College Hospital, The Nilgiris District. நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கு... மேலும் பார்க்க

வேலை நாடுநா்கள் கவனத்திற்கு...

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், வேலை நாடுநா்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெள... மேலும் பார்க்க

மத்திய அரசில் 14,582 பணியிடங்களுக்கு ஜூலை 4 வரை விண்ணப்பிக்க அவகாசம்: எஸ்எஸ்சி

சென்னை: மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள 14,582 காலிப்பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 4 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் (எஸ்.எஸ்.சி.) தென்மண்டல இயக்குநா் கே... மேலும் பார்க்க