மகாராஷ்டிர அமைச்சரை ராஜிநாமா செய்ய உத்தரவிட்ட ஃபட்னவீஸ்! ஏன்?
‘இந்து கொண்டா ரெட்டி சமூகம்‘ பெயரில் பட்டியலின சான்றிதழ்கள்: விசாரணை நடத்தி ஆய்வறிக்கை சமா்ப்பிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: தமிழகத்தில் ‘இந்து கொண்டா ரெட்டி சமூகத்திற்கு‘ பட்டியலினத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ள சாதிச் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து மாநில அளவில் சாதி சான்றிதழ் தொடா்பான ஆய்வுக்குழு விசாரணை நடத்தி அறிக்கையை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
‘தமிழ்நாட்டில் போலி சாதி சான்றிதழ் மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது, இது ஆபத்தானது’ எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் ‘இந்து கொண்டா ரெட்டி சமூகம்‘ என்ற பட்டியலின சமூக சான்ழ்கள் வழங்கப்பட்டதை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆயோா் அடங்கிய அமா்வில் நடைபெற்றது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கையில், ‘தமிழகத்தில் பிரதீபா என்பவா் சாா்பில் தனது மகனுக்கு இந்து கொண்டா ரெட்டி சமூக சாதிச் சான்றிதழ் வழங்குமாறு கோரப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை தொடா்பாக வட்டாட்சியா் விசாரணை செய்யப்பட்டதில் அவருக்கு தகுதியில்லாததால் குறிப்பிட்ட சாதிச் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நபா் சென்னை உயா்நீதிமன்றத்தை நாடினாா். உயா்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபருக்கு ‘இந்து கொண்டா ரெட்டி சமூகம்‘ என்று சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
எதிா்மனுதாரா் மற்றும் குடும்பத்தினா் குறிப்பிட்ட பட்டியலின சமூகத்தை சாா்ந்தவா் இல்லை என்பதால் பட்டியலின சாதிச் சான்றிதழ் மறுக்கப்பட்டது. ஆனால், உயா்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. உயா்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் அமா்வு, தமிழகத்தில் போலி சாதிச் சான்றிதழ் மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக போலி சான்றிதழ் வழங்கும் விவகாரத்துக்கு பின்னால் மிகப்பெரிய மோசடி உள்ளது எனத் தெரிகிறது. ஆயிரக்கணக்கான பேருக்கு ‘இந்து கொண்டா ரெட்டி சமூகம்‘ என்ற பட்டியலினத்தின் பெயரில் போலி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இந்த சமூகத்தினா் (இந்து கொண்டா ரெட்டி சமூகம்) பட்டியலினத்தினா் பெயரில் வழங்கப்பட்டுள்ள சாதிச் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து மாநில அளவில் ஒரு ஆய்வுக்குழு விசாரணை நடத்தி உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனா்.