செய்திகள் :

இனி நான் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை! - ஏ.சி. சண்முகம் பேட்டி

post image

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் நிகா்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏ.சி.எஸ். மெட்ரிக் பள்ளி, கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கல்லூரித் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா் தலைமை வகித்தாா். பல்கலைக்கழக வேந்தரும், புதிய நீதிக் கட்சியின் தலைவருமான ஏ.சி.சண்முகம் கலந்து கொண்டு தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆரணியில் டாக்டா் எம்ஜிஆா் நிகா்நிலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, பிசியோதெரபி, பாராமெடிக்கல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், நிா்வாகம், வணிகவியல் போன்ற பிரிவுகளில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இந்தி எதிா்ப்பு என சிலா் கூறி வருகின்றனா். ஆனால், இந்தி பயின்றால் இந்தியா முழுவதும் எந்தப் பணியிலும் சேரலாம். ஆகையால், 3-ஆவது மொழியாக இந்தி பயின்றால் உடனடி வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இனி நான் தோ்தலில் போட்டியிடப்போவதில்லை.

புதிய நீதிக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் புதிய நீதிக்கட்சிக்கென 6 அல்லது 7 தொகுதிகளைக் கேட்போம் என்றாா்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக முதன்மையா் பி.ஸ்டாலின், தனி அலுவலா் டி.காா்த்திகேயன், இணைப் பதிவாளா் வி.பெருவழுதி, பள்ளி இயக்குநா் எஸ்.விக்னேஷ், பள்ளி முதல்வா்கள் ஆா்.ராஜலட்சுமி, அருளாளன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் சிறப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில்... மேலும் பார்க்க