செய்திகள் :

"இன்னும் 176 நாள்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

post image

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பிரசார பயணத்தை மதுரையில் தொடங்கிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இரண்டாவது நாளாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரசாரத்தை நேற்று தொடங்கினார்.

காரைக்குடி நிகழ்ச்சியில் நயினார்

அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்க பாஜக மாவட்டத் தலைவர் பாண்டித்துரை பலவிதமான கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

நூறடி சாலையிலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின் உரையாற்றிய நயினார் நாகேந்திரன், "சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்கள் வெள்ளையனை விரட்ட ஸ்ரீரங்கத்தில் ஜம்பு பிரகடனத்தை வெளியிட்டார்கள். அதன் காரணமாக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வெள்ளையருக்கு எதிராக போராடினார்கள். அதேபோல் திமுக ஆட்சியை விரட்ட செட்டிநாட்டு சீமையான காரைக்குடியில் நானும் பிரகடனம் செய்கிறேன். சாதி, மத, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்று திரண்டு மக்கள் விரோத திமுக அரசை அகற்ற சூளுரைப்போம்.

காரைக்குடி கூட்டத்தில்

திமுக ஆட்சியில் கல்வி நிறுவனங்கள் அருகில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. குற்றச் சம்பவங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

அமித் ஷா திமுக-வை அழிக்க நினைக்கிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். உங்களை அழிக்க நாங்கள் தேவையில்லை, அதை மக்களே பார்த்துக் கொள்வார்கள் என அமித் ஷா பதில் அளித்தார். அமித் ஷாவின் வியூகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்.

கரூர் சம்பவத்தில் தமிழக அரசின் மீது நம்பகத்தன்மை இல்லாத காரணத்தால் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதில் அனைத்து உண்மைகளும் வெளி வரும். தவறு செய்தவர்கள் சிறைக்கு செல்வது உறுதி. திமுக ஆட்சியை அகற்றுவதற்கு கவுண்டவுன் தொடங்கி விட்டது. இன்னும 176 நாள்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்." என்றார்.

ஹரியானா: "சாதிய ஒடுக்குமுறையால் உயிரை மாய்த்துக்கொண்ட IPS அதிகாரி" - காங்கிரஸ் கண்டனம்!

ஹரியானாவில் கூடுதல் டி.ஜி.பியாக பணியாற்றி வந்த ஒய். பூரன் குமார் என்ற அதிகாரி தனது துப்பாக்கியாலேயே சுட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவரைத் தொ... மேலும் பார்க்க

'16 நாட்களுக்குப் பின் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்; விஜய்யுடன் முக்கிய மீட்டிங்!' - என்ன நடந்தது?

கரூர் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்த தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த், 16 நாட்களுக்குப் பிறகு வெளியில் வந்திருக்கிறார். நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டில் அவரை சந்தித்து முக்கிய ஆ... மேலும் பார்க்க

"ஜெயலலிதா இருந்தால் இப்படி பேச முடியுமா?" - சி.வி.சண்முகத்துக்கு கீதா ஜீவன் கண்டனம்!

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி சண்முகம் பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களைக் கூறியதாக கண்டனம் தெரிவித்துள்ளார் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீ... மேலும் பார்க்க

ஊட்டி: எம்.எல்.ஏ அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்பு கூட்டம் - சர்ச்சையில் கே.வி.தங்கபாலு

நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வருகைத் தந்திருந்த காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவரும் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான கே.வி.தங்கபாலு, கட்சி நிர்வாகிகள் பலருடன் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறா... மேலும் பார்க்க

Karur Case: பில்கிஸ் பானு வழக்கு டு ஜல்லிக்கட்டு; CBI யை கண்காணிக்கும் அஜய் ரஸ்டோகி - யார் இவர்?

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பரப்புரை செய்தபோது, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு அமைத்த ஒருநபர்... மேலும் பார்க்க

புதுச்சேரி: இந்திரா – ராஜீவ் காந்தி சதுக்கம் இடையே ரூ.436 கோடியில் மேம்பாலம்! - எப்போது முடியும்?

`30 ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாது...’சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும். ஆனால் சமீபகாலமாக சுற்ற... மேலும் பார்க்க