செய்திகள் :

ஊட்டி: எம்.எல்.ஏ அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்பு கூட்டம் - சர்ச்சையில் கே.வி.தங்கபாலு

post image

நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வருகைத் தந்திருந்த காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவரும் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான கே.வி.தங்கபாலு, கட்சி நிர்வாகிகள் பலருடன் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான இந்த கூட்டம் அரசு கட்டடமான ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடத்தியிருக்கிறார்கள். அங்கேயே செய்தியாளர் சந்திப்பையும் நடத்தியிருக்கிறார்கள். இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.

கே.வி தங்கபாலு

இது குறித்து குற்றச்சாட்டை முன்வைக்கும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், " எம்.எல்.ஏ அலுவலகம்‌ என்பது குறிப்பிட்ட அந்த சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மக்கள் எம்.எல்.ஏ - வைச் சந்தித்து தங்களின் குறைகளையும்‌ கோரிக்கைகளையும் முறையிடும் இடமாகும். அந்த நோக்கத்திற்காக மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இயங்கி வருகிறது.

மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ - விற்கும் தொகுதி மக்களுக்குமான பொதுவான இந்த அரசு கட்டடத்தில் கட்சி கூட்டத்தை நடத்தியிருப்பது மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகம்.

கேள்வி கேட்க யாருமில்லை என்ற காரணத்தால் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த நிர்வாகியும் அரசுத்துறை மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவரான கே.வி தங்கபாலுவிற்கு இது தெரியாதா. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கட்சி கூட்டத்தை நடத்தியதற்கு முறையான விளக்கத்தை அவர்கள் தர வேண்டும்" என்றனர்.

கே.வி தங்கபாலு

காங்கிரஸ் கட்சியின் நீலகிரி மாவட்ட தலைவரும் ஊட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கணோஷ் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர்களின் ஒருவரான மஞ்சூர் நாகராஜை தொடர்புகொண்டு கேள்வி எழுப்பினோம், "கட்சி கூட்டம் காங்கிரஸ் அலுவலகத்தில் தான் நடைபெற்றது. கழிவறையை பயன்படுத்த எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வருகைத் தந்திருந்த நிர்வாகி தங்கபாலு அவர்கள், இங்கு வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். மற்றபடி எதுவுமில்லை" என முடித்துக்கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே‌.வி. தங்கபாலு எம்.எல்.ஏ அலுவகத்தில் கட்சி கூட்டத்தை நடத்திய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

"ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவில்லை" - அன்புமணி குற்றச்சாட்டு; அமைச்சர் மறுப்பு

ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடியில் முதலீடு செய்யவிருப்பதாகவும், இதன்மூலம் 14,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது.இது தொடர்பாக, தலைமைச... மேலும் பார்க்க

ஹரியானா: "சாதிய ஒடுக்குமுறையால் உயிரை மாய்த்துக்கொண்ட IPS அதிகாரி" - காங்கிரஸ் கண்டனம்!

ஹரியானாவில் கூடுதல் டி.ஜி.பியாக பணியாற்றி வந்த ஒய். பூரன் குமார் என்ற அதிகாரி தனது துப்பாக்கியாலேயே சுட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவரைத் தொ... மேலும் பார்க்க

'16 நாட்களுக்குப் பின் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்; விஜய்யுடன் முக்கிய மீட்டிங்!' - என்ன நடந்தது?

கரூர் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்த தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த், 16 நாட்களுக்குப் பிறகு வெளியில் வந்திருக்கிறார். நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டில் அவரை சந்தித்து முக்கிய ஆ... மேலும் பார்க்க

"ஜெயலலிதா இருந்தால் இப்படி பேச முடியுமா?" - சி.வி.சண்முகத்துக்கு கீதா ஜீவன் கண்டனம்!

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி சண்முகம் பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களைக் கூறியதாக கண்டனம் தெரிவித்துள்ளார் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீ... மேலும் பார்க்க

Karur Case: பில்கிஸ் பானு வழக்கு டு ஜல்லிக்கட்டு; CBI யை கண்காணிக்கும் அஜய் ரஸ்டோகி - யார் இவர்?

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பரப்புரை செய்தபோது, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு அமைத்த ஒருநபர்... மேலும் பார்க்க

"இன்னும் 176 நாள்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பிரசார பயணத்தை மதுரையில் தொடங்கிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இரண்டாவது நாளாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். காரைக்குடி நிகழ... மேலும் பார்க்க