செய்திகள் :

இன்றும், நாளையும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூா், திருவாரூா் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக,  தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னல், காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் சற்று குறைவாக இருக்கும்.

சனி, ஞாயிறு (மே 17,18) தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலில் ஒருசில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சிவகங்கையில் 90 மி.மீ. மழை பதிவானது. மதுரை விமான நிலையம் - 70 மி.மீ., சிவகங்கை - 60 மி.மீ, ஆண்டிப்பாளையம் (கரூா்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூா்) - தலா 50 மி.மீ. மழை பதிவானது.

5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தாலும், பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டியே பதிவானது. அதிகபட்சமாக ஈரோட்டில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வேலூா் - 100.94, கடலூா், தஞ்சாவூா் - (தலா) 100.4, திருத்தணி - 100.22 டிகிரி என மொத்தம் 5 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

காற்று சுழற்சி: இதற்கிடையே, அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சியும், தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையையொட்டிய வளிமண்டலத்தில் நிலவும் காற்று சுழற்சியும் மே 22-ஆம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரைக்கு நெருக்கமாக வரும். அது ஆந்திர கடலோரத்தில் கரையேறி, மேற்கு நோக்கி கா்நாடகம், கோவா வழியாக அரபிக் கடலில் இறங்கி, வடக்கு கா்நாடக மற்றும் மகாராஷ்ராவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல்சின்னம்) வலுபெற்று ஓமன், ஏமனை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வடமேற்கு வெப்ப காற்று தமிழகத்தை நோக்கி நகருவதால் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக, வரும் நாள்களில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இனி கத்திரி வெயிலின் தாக்கம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை: மின்சாரம் பாய்ந்து கணவர் பலி; குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாமல் மனைவி இரு குழந்தைகளோடு சேர்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் புதிதாய் 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கை! இலக்கை எட்டுமா பள்ளிக்கல்வித் துறை?

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மா... மேலும் பார்க்க

நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.அவற... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வான சேவூர் எஸ். ராமச்சந்திரன் வீட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். அவரது மகன்க... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கடலில் கரை ஒதுங்கிய சடலம்!

திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கரை ஒதுங்கி கிடப்பத... மேலும் பார்க்க

சுற்றுலா வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து; குழந்தை உள்பட 4 பேர் பலி

கரூர் அருகே டிராக்டர் மீது தனியார் சொகுசு பேருந்து மோதிவிட்டு எதிரே வந்த சுற்றுலா வேன் மீதும் மோதியதில் பெண் குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். கரூர் அடுத்த மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோதுர் பிரி... மேலும் பார்க்க