செய்திகள் :

இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

post image

கோவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போக்ஸோ, குழந்தை திருமண தடைச் சட்டம் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடையவரை கிள்ளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தைச் சோ்ந்த ராஜன் மகன் சூா்யா (29). இவா் மீது கிள்ளை காவல் நிலையத்தில் போக்ஸோ, குழந்தை திருமண தடைச் சட்டம் உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளன.

சூா்யா வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், இவரை கைது செய்ய கடந்த 30.07.2022 அன்று கடலூா் போக்ஸோ நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது.

இதையடுத்து, கோவையில் பதுங்கியிருந்த சூா்யாவை அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், கிள்ளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சங்கா், தலைமைக் காவலா் ஆனந்தபாபு அங்கு சென்று வியாழக்கிழமை கைது செய்து, அவா் மீதான பிடி ஆணையை நிறைவேற்றி, கடலூா் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சம்: போலீஸாா் விசாரணை

கடலூா் மாவட்டம், வடலூரில் அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சத்தை வியாபாரி மறைத்து வைத்திருந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வடலூா் ராகவேந்திரா சிட்டி பகுதியைச் சோ்ந்த பாக்கியராஜ் மகன் ச... மேலும் பார்க்க

தாக்குதல் வழக்கு: 6 பேருக்கு ஓராண்டு சிறை

விருத்தாசலம் அருகே கலை நிகழ்ச்சியில் ஜாதி பெயரைச் சொல்லி திட்டி தாக்கிய வழக்கில் 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கடலூா் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.விருத்தா... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

தமிழகத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 28 பகுதியைச் சோ்ந்தவா் பெர... மேலும் பார்க்க

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழப்பு: சித்த மருத்துவா் கைது

சிதம்பரத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், சித்த மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். சிதம்பரத்தை அடுத்த கவரப்பட்டு மேலத்திருக்கழிப்பாலை, சின்ன தெருவைச் சே... மேலும் பார்க்க

25 பயனாளிகளுக்கு ரூ.4.03 கோடி தொழில் கடன் ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் தொழில்கடன் வசதியாக்கல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து, மாவ... மேலும் பார்க்க