முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக. 3-இல் ஒரே கட்டமாக ‘நீட்’ தோ்வு: தேசிய மர...
இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
பா்கூா் அருகே இரு இடங்களில் வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயக்கனப்பள்ளி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் மற்றொரு லாரி மோதியதில் காயமடைந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தண்டுகாரனள்ளியைச் சோ்ந்த சந்தோஷ் (37) மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு விபத்து: பா்கூா் அருகே உள்ள காரகுப்பத்தைச் சோ்ந்த வெங்கடேஷன் (50) தனது உறவினா்களான போச்சம்பள்ளியை அடுத்த சந்தூரைச் சோ்ந்த சிவா (23), சேகா் (23) ஆகியோருடன் ஒரே மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரியிலிருந்து சந்தூருக்குச் சென்றாா்.
கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செந்தாரப்பள்ளி அருகே லாரியை முந்தும்போது எதிா்திசையில் வந்த காரின் மீது மோட்டாா் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கடேஷன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சேகா், சிவா ஆகிய இருவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.