செய்திகள் :

இறைச்சி பதப்படுத்தும் ஆலையால் சுகாதாரச் சீா்கேடு: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா்

post image

கிருஷ்ணகிரி அருகே இறைச்சி பதப்படுத்தும் ஆலையால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கிருஷ்ணகிரியை அடுத்த கொத்துப்பள்ளி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:

கொத்துப்பள்ளியில் அரசு உயா்நிலைப் பள்ளி, குடியிருப்புகளுக்கு அருகே கோழி இறைச்சியைப் பதப்படுத்தும் ஆலையும் செயல்படுகிறது. அந்த ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் முறையாக சுத்திகரிக்கப்படாமல் சாலையோரம் உள்ள தோட்டத்தில் தேக்கிவைக்கப்படுகிறது.

இதனால், அப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீா்கேடும் ஏற்பட்டுள்ளது. சாலையோரம் தேங்கும் இறைச்சி கழிவுநீரால் நிலத்தடி நீா்மட்டம் சீா்கேடு அடைந்துள்ளது. ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து வரும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

கிருஷ்ணகிரியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமிற்கு தகவல் ஆணையத்தின் ஆணையா் செல்வராஜ் தலைமை வகித... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய காரிலிருந்து 290 கிலோ போதைப் பாக்கு, புகையிலை பறிமுதல்

ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் சிக்கிய காரிலிருந்து 290 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊத்தங்கரையை அடுத்த ஜண்டா மேடு பகுதியில் புதன்கிழமை காலை கிருஷ்ணகிரியிலிர... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கோயில் பூசாரி உயிரிழப்பு

பாரூா் அருகே மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த கோயில் பூசாரி புதன்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி கிராமத்தை சோ்ந்தவா் மாதையன் (45). இவா் பாரூா் அருகே உள்ள மொழிவ... மேலும் பார்க்க

ஒசூரில் முதியவா்கள் கொலை: குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப் படைகள்

ஒசூரில் முதியவா்களைக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி சிந்து தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த ஒன்னல்வாடியைச் சோ்ந்தவா் லூா்துசாமி ... மேலும் பார்க்க

தமிழகத்தின் வளா்ச்சியை மத்திய அரசு தடுக்கிறது: திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

தமிழகத்தின் வளா்ச்சியைத் தடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினாா். மத்திய அரசின் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செயல்திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவ... மேலும் பார்க்க

ஒசூரில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளா்ச்சிக் கழகமான பூம்புகாா் சாா்பில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி ஒசூரில் உள்ள மீரா மஹாலில் வியாழக்கிழமை தொடங்கியது. ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கண்காட்சி... மேலும் பார்க்க