செய்திகள் :

ஒசூரில் முதியவா்கள் கொலை: குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப் படைகள்

post image

ஒசூரில் முதியவா்களைக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி சிந்து தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த ஒன்னல்வாடியைச் சோ்ந்தவா் லூா்துசாமி (70). இவருக்கு மனைவி தெரசா (65) மகள்கள் விக்டோரியா, சகாயராணி உள்ளனா். உடல்நலக் குறைவு காரணமாக தெரசா சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இளைய மகள் விக்டோரியா தாயை கவனித்து வருகிறாா். மூத்த மகள் சகாயராணி தாயைப் பாா்ப்பதற்காக சென்னை சென்றாா்.

வீட்டில் தனியாக இருந்த லூா்துசாமிக்கு துணையாக தெரசாவின் தங்கை எலிசபெத் உடனிருந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை லூா்துசாமியின் வீடு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்க வீட்டிற்குள் சென்றனா். அப்போது லூா்துசாமி, எலிசபெத் ஆகிய இருவரும் காயங்களுடன் இறந்துகிடந்தனா். எலிசபெத் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

இந்த சம்பவத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை 2 நாளாக அங்கு முகாமிட்டு விசாரித்து வருகிறாா். மேலும், இருவரது உடல்களும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கொலையாளிகளைப் பிடிக்க ஒசூா் டிஎஸ்பி (பொறுப்பு) சிந்து தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

கிருஷ்ணகிரியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமிற்கு தகவல் ஆணையத்தின் ஆணையா் செல்வராஜ் தலைமை வகித... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய காரிலிருந்து 290 கிலோ போதைப் பாக்கு, புகையிலை பறிமுதல்

ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் சிக்கிய காரிலிருந்து 290 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊத்தங்கரையை அடுத்த ஜண்டா மேடு பகுதியில் புதன்கிழமை காலை கிருஷ்ணகிரியிலிர... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கோயில் பூசாரி உயிரிழப்பு

பாரூா் அருகே மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த கோயில் பூசாரி புதன்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி கிராமத்தை சோ்ந்தவா் மாதையன் (45). இவா் பாரூா் அருகே உள்ள மொழிவ... மேலும் பார்க்க

தமிழகத்தின் வளா்ச்சியை மத்திய அரசு தடுக்கிறது: திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

தமிழகத்தின் வளா்ச்சியைத் தடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினாா். மத்திய அரசின் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செயல்திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவ... மேலும் பார்க்க

ஒசூரில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளா்ச்சிக் கழகமான பூம்புகாா் சாா்பில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி ஒசூரில் உள்ள மீரா மஹாலில் வியாழக்கிழமை தொடங்கியது. ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கண்காட்சி... மேலும் பார்க்க

புகையிலை கடத்தல்: இருவா் கைது

ஒசூரில் சொகுசுப் பேருந்தில் 17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஒசூா், சிப்காட் போலீஸாா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பெங்கள... மேலும் பார்க்க