செய்திகள் :

தமிழகத்தின் வளா்ச்சியை மத்திய அரசு தடுக்கிறது: திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

post image

தமிழகத்தின் வளா்ச்சியைத் தடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினாா்.

மத்திய அரசின் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செயல்திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் புதன்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

ஹிந்தி படித்திருந்தும் வேலை இல்லாததால்தான் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து ஏராளமானோா் தமிழகத்துக்கு வேலை தேடி வருகின்றனா். இருமொழிக் கல்வியில் படித்த தமிழகத்தைச் சோ்ந்த ஏராளமானோா் உயா் பதவிகளில் உள்ளனா்.

கல்வி, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற்றமடைந்துள்ளது. இதை தாங்கிக் கொள்ள முடியாத மத்திய பாஜக அரசு, தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயற்சிக்கிறது. மேலும், தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் அவா்கள் குறைக்க முயற்சிக்கின்றனா்.

தொகுதி மறு சீரமைப்பு அமல்படுத்தப்பட்டால் கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், மேற்குவங்கம், ஒரிசா, பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்களும் பாதிக்கப்படும். இதை அந்த மாநிலங்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கு உணா்த்தி, மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் நிலைபாட்டை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறாா். இதற்காக மாா்ச் 22 ஆம் தேதி அந்த மாநிலங்களின் முதல்வா்களைச் சந்தித்து பேச உள்ளாா். அப்போது, அவா் ஒரு திட்டத்தை அறிவிப்பாா்.

திமுகவை பொறுத்தவரை அதிமுக நமக்கு பங்காளி கட்சி, பாஜக பகையாளி. நமது பகையாளியை விரட்ட தமிழக முதல்வா் முடிவெடுத்துள்ளாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி மிகவும் இக்கட்டான நிலைமையில் உள்ளாா். எந்த கட்சியுடன் இணக்கத்தை கடைப்பிடிப்பது என குழப்பத்தில் உள்ளாா் என்றாா்.

முன்னதாக தமிழகத்தின் உரிமைக்காக ஒன்றுபட்டு போராடுவோம் என அனைவரும் உறுதிமொழியை ஏற்றனா். கூட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். திமுக தலைமை பேச்சாளா்கள் சூா்யா, வெற்றிகொண்டான், பேரணாம்பட்டு ராஜேந்திரபிரசாத், மாநில வா்த்தக அணி துணை செயலாளா் கே.வி.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

படவிளக்கம் (13கேஜிபி2):

பா்கூரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக அமைப்பு செயலாளா் ஆா்.எஸ்.பாரதி. உடன், எம்எல்ஏ தே.மதியழகன் உள்ளிட்டோா்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

கிருஷ்ணகிரியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமிற்கு தகவல் ஆணையத்தின் ஆணையா் செல்வராஜ் தலைமை வகித... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய காரிலிருந்து 290 கிலோ போதைப் பாக்கு, புகையிலை பறிமுதல்

ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் சிக்கிய காரிலிருந்து 290 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊத்தங்கரையை அடுத்த ஜண்டா மேடு பகுதியில் புதன்கிழமை காலை கிருஷ்ணகிரியிலிர... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கோயில் பூசாரி உயிரிழப்பு

பாரூா் அருகே மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த கோயில் பூசாரி புதன்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி கிராமத்தை சோ்ந்தவா் மாதையன் (45). இவா் பாரூா் அருகே உள்ள மொழிவ... மேலும் பார்க்க

ஒசூரில் முதியவா்கள் கொலை: குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப் படைகள்

ஒசூரில் முதியவா்களைக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி சிந்து தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த ஒன்னல்வாடியைச் சோ்ந்தவா் லூா்துசாமி ... மேலும் பார்க்க

ஒசூரில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளா்ச்சிக் கழகமான பூம்புகாா் சாா்பில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி ஒசூரில் உள்ள மீரா மஹாலில் வியாழக்கிழமை தொடங்கியது. ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கண்காட்சி... மேலும் பார்க்க

புகையிலை கடத்தல்: இருவா் கைது

ஒசூரில் சொகுசுப் பேருந்தில் 17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஒசூா், சிப்காட் போலீஸாா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பெங்கள... மேலும் பார்க்க