செய்திகள் :

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலைக் கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம்

post image

திருக்குவளை: நாகை மாவட்ட மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல் விவகாரத்தை கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சுமார் 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடற்கரை ஓரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை, வெள்ளபள்ளம், ஆற்காட்டுதுறை, செருதூர் ஆகிய நான்கு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஐந்து படகுகளில் சென்ற 24 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி பொருட்களை பறித்து சென்றனர்.

குறிப்பாக செருதூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு படங்களில் சென்ற 10 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளைர்கள் நடத்திய தாக்குதல் விவகாரத்தை கண்டித்து அந்த கிராமத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி இன்று (மே 4) செருதூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் அதிகமான பைபர் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

ஏற்கனவே மீன்பிடித்தடை காலம் அமலில் இருக்கும் காரணத்தால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாத சூழலில், தற்பொழுது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலால் பைபர் படகு மீனவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை குற்றச்சாட்டு எழுந்துள்ளது.செருதூர் கிராம மீனவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இன்று மனு அளிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், லட்சக்கணக்கான மீன்பிடி உபகரண பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர் ‌

விராலிமலை அருகே பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதிரிபட்டி பிரிவு அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து நேரிட்டது.இவ்விபத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிக மதிப்பிலான பழைய பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.புதுக்கோட்டை மாவட்... மேலும் பார்க்க

அடுத்த மணிநேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை!

சென்னை புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்... மேலும் பார்க்க

மதுராந்தகம் அருகே நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

மதுராந்தகம் அருகே நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அக்லி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் - ஆஷா தம்பதியரி... மேலும் பார்க்க

சிங்கப்பூர் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சிங்கப்பூர் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மக்கள் செயல் கட்சி-யை (PAP) அதன் 14-ஆவது தொடர... மேலும் பார்க்க

நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் தொடங்கியது.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்பின் அகில இந்... மேலும் பார்க்க