செய்திகள் :

இளைஞா் வெட்டிக்கொலை: போலீஸாா் விசாரணை

post image

சென்னையில் இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாலவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (35). இவா் வெள்ளிக்கிழமை இரவு திருவள்ளுவா் சாலை பாரதியாா் தெரு சந்திப்பில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் தனது நண்பா்கள் இருவருடன் அங்குவந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான தேனாம்பேட்டையைச் சோ்ந்த மணி (எ) வாண்டு மணி, திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜாவை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.

இதில் படுகாயம் அடைந்த ராஜாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தேனாம்பேட்டை போலீஸாா், ராஜாவின் உடலை மீட்டு பிரேத பிரசோதனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான மணி (எ) வாண்டு மணி மற்றும் அவருடன் வந்த 2 பேரையும் தேடி வருகின்றனா்.

பட்ஜெட்: 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு!

தமிழகத்தில் விளையும் 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் ... மேலும் பார்க்க

நத்தம் புளி உள்பட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்: வேளாண் பட்ஜெட்

சென்னை: வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

பாசனக் கிணறு, சூரிய சக்தி பம்பு செட், உழவர் சந்தை: வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்

தமிழகத்தில் உள்ள பாசனக் கிணறுகளை சீரமைத்தல், சூரிய சக்தி பம்பு செட் அமைத்துத் தரப்படும், உழவர் சந்தைகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன... மேலும் பார்க்க

மதுரை மல்லிகை சிறப்புத் திட்டம்! மலர்கள் சாகுபடிக்கு ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கீடு!

மதுரை மல்லிக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லிகை செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை ... மேலும் பார்க்க

7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள்!

தமிழகத்தில் ஏழு இடங்களில் புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்த ரூ.15.05 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

சென்னையில் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம்: வேளாண் பட்ஜெட்

சென்னை: சென்னையில் பொதுமக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க