செய்திகள் :

இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம்: "பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கிறீர்களா?" - ட்ரம்ப்பின் பதில் என்ன?

post image

இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிந்துரைத்த 20 அம்சங்களை இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, நேற்று எகிப்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

பாலஸ்தீனத்திற்கு நாடு அங்கீகாரம்?

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், அமெரிக்கா கிளம்பிய ட்ரம்பிடம், 'பாலஸ்தீனத்தை நீங்கள் ஒரு நாடாக அங்கீகரிக்கிறீர்களா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் | எகிப்து
இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் | எகிப்து

"ஒரு நாடா... இரண்டு நாடா என்பது குறித்து பேசவில்லை. நாங்கள் காசாவை மறுகட்டமைப்பது குறித்துப் பேசுகிறோம்.

பலர் ஒரு நாடு தீர்வை விரும்புகிறார்கள். சிலர் இரு நாடு தீர்வை விரும்புகிறார்கள். அது குறித்து பார்க்க வேண்டும். ஆனால், நான் எதுவும் அது குறித்து தெரிவிக்கவில்லை" என்று பதிலளித்திருக்கிறார்.

ஆனால், அவர் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது குறித்து எந்தக் கருத்தையுமே நேரடியாகத் தெரிவிக்கவில்லை.

20 அம்சங்களில்...

மேலே கூறப்பட்டுள்ள ட்ரம்பின் 20 அம்சங்களில், "காசா மறுகட்டமைக்கப்பட்டவுடன், பாலஸ்தீனம் வெற்றிகரமாகச் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின்னர், பாலஸ்தீனத்திற்கு நாடு என்கிற அந்தஸ்து வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி: இந்திரா – ராஜீவ் காந்தி சதுக்கம் இடையே ரூ.436 கோடியில் மேம்பாலம்! - எப்போது முடியும்?

`30 ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாது...’சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும். ஆனால் சமீபகாலமாக சுற்ற... மேலும் பார்க்க

Karur: தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்; கரூர் துயரத்திற்கு தீர்மானம் வாசிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு நேற்று (அக்டோபர் 13) அறிவித்திருந்தார். அந்தவகையில் இன்று சட்டப்பேரவைக் கூட்ட... மேலும் பார்க்க

கேரளா: மத்திய அரசை விமர்சித்து பதவி விலகிய முன்னாள் ஐஏஎஸ் கண்ணன் கோபிநாதன் காங்கிரஸில் இணைந்தார்

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கண்ணன் கோபிநாதன். இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தாத்ரா நகர் - ஹவேலி கலெக்டராக இருந்தார். கேரளத்தில் 2018-ம் ஆண்டு மழை வெள்ள பிரளயம் ஏற்பட்டபோது மக்களோடு மக்களாக இற... மேலும் பார்க்க

திராவிட மாடலா? பழமைவாத மாடலா? - ஜி.டி.நாயுடு பாலமும் சில கேள்விகளும்!

ஜி.டி.நாயுடு மேம்பால சர்ச்சை! கோவை அவினாசியில் திறக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் மிக நீண்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் என தமிழக அரசு பெயரிட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி பால... மேலும் பார்க்க