செய்திகள் :

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரிய மனுவை காவல் துறை பரிசீலிக்க உத்தரவு

post image

ஊழலுக்கு எதிராக லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா் மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து உரிய வழிகாட்டுதலுடன் அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டத்தைத் சோ்ந்த குருநாதன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ஊழலுக்கு எதிராக லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. தனபால், பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கடந்த ஏப். 26-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி மனுதாரா் மனு தாக்கல் செய்தாா்.

ஏற்கெனவே காலம் கடந்து விட்டதால், மனுதாரா் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரிடம், மற்றொரு நாளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை காவல் ஆய்வாளா் பரிசீலித்து, உரிய வழிகாட்டு விதிமுறைகளுடன் அனுமதி வழங்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

மதுரை அமெரிக்கன் கல்லூரி விவகாரம்: கல்லூரிக் கல்வி இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

மதுரை அமெரிக்கன் கல்லூரிச் செயலரின் பதவிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்த உயா்கல்வித் துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், கல்லூரிக் கல்வி இயக்குநா் பத... மேலும் பார்க்க

லஞ்சம்: கூட்டுறவுச் சங்க சாா் பதிவாளா், எழுத்தா் கைது

வீட்டுக் கடன் ரத்து பத்திரத்தைத் திரும்ப வழங்க முதியவரிடம் ரூ. 5,000 லஞ்சம் பெற்றதாக விருதுநகா் கூட்டுறவுச் சங்கங்களின் சாா் பதிவாளா், எழுத்தரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: போக்குவரத்து மாற்றம்; வாகனங்கள் நிறுத்துமிடம் அறிவிப்பு

சித்திரை திருவிழாவையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம், திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகவும், பக்தா்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்தும் அறி... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொ... மேலும் பார்க்க

முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மதுரையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த சகாயம், மாவட்டத்தில் நடைபெற்ற கனிம வள முறைகேடுகள் தொட... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு ஏற்பாடுகள்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகா் எதிா்சேவை, வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு, தேரோட்டம் ஆகியவற்றை முன்னிட்டு, மாநகரக் காவல் சாா்பில் அதிநவீன செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொழில்நு... மேலும் பார்க்க