செய்திகள் :

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு!

post image

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

உதகை மற்றும் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எத்தனை சுற்றுலா வாகனங்களை இயக்க முடியும் என்பது குறித்த ஆய்வை சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த முடிவு வருவதற்கு கால தாமதம் ஆகும் என்பதால், உதகை மற்றும் கொடைக்கானலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சுற்றுலா வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு நீதிபதிகள் கட்டுப்பாடு விதித்தனர்.

இதையும் படிக்க: தமிழுக்கு முக்கியத்துவம்! தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!

அதன்படி, உதகைக்கு வார நாள்களில் 6,000 செல்லும் சுற்றுலா வாகனங்கள், வார இறுதி நாள்களில் 8,000 சுற்றுலா வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். கொடைக்கானலுக்கு வாரநாள்களில் 4,000 சுற்றுலா வாகனங்கள், வார இறுதி நாள்களில் 6,000 சுற்றுலா வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மின்சார வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அரசுப் பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, கொடைக்கானல் மலைப் பகுதியில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள்) கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்லத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக பட்ஜெட் எப்படி இருந்தது? அரசியல் கட்சிகளின் கருத்து!

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் இது குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர். மேலும் பார்க்க

திமுகவினர் பயனடையும் பட்ஜெட்: அண்ணாமலை விமர்சனம்

திராவிட முன்னேற்றக் கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை விமர்சித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நித... மேலும் பார்க்க

ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை: உயர்நீதிமன்றம் உறுதி

விதிகளை மீறி வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா உள்பட ஐந்து பேரின் சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உற... மேலும் பார்க்க

ஏப். 30 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: அப்பாவு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்... மேலும் பார்க்க

பட்ஜெட் ஒளிபரப்பப்பட்ட எல்இடி திரையில் ஆங்கிலத்தில் ஒளிபரப்பான சீமான் பேட்டி!

கோயம்புத்தூரில் பட்ஜெட் ஒளிபரப்பப்பட்ட எல்இடி திரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஆங்கில மொழியில் ஒளிபரப்பட்டதால் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.தமிழ்நா... மேலும் பார்க்க

வரம்புக்குள்தான் தமிழக அரசின் கடன் உள்ளது: உதயசந்திரன்

மாநிலங்களின் கடன் வாங்கும் வரம்புக்குள்தான் தமிழக அரசின் கடன் உள்ளது என்று நிதித் துறை செயலர் உதயசந்திரன் கூறியுள்ளார்.வரும் 2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பேரவையில் இன்று தா... மேலும் பார்க்க