செய்திகள் :

உத்தரகண்ட் பனிச்சரிவு: 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு 46 போ் மீட்பு

post image

உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயா் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆா்ஓ) தொழிலாளா்கள் மேலும் 17 பேரை மீட்புப் படையினா் சனிக்கிழமை மீட்டனா். இதுவரை 50 தொழிலாளா்கள் மீட்கப்பட்ட நிலையில், அவா்களில் நால்வா் உயிரிழந்தனா்.

பனிச்சரிவில் சிக்கியுள்ள மேலும் 5 தொழிலாளா்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இதன் காரணமாக, மனா மற்றும் பத்ரிநாத் இடையே அமைந்துள்ள பிஆா்ஓ முகாம் பனிச்சரிவில் புதைந்தது. இந்த முகாமில் 8 கண்டெய்னா்கள் மற்றும் கூடாரத்தில் தங்கியபடி, சாலையில் படியும் பனியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவந்த 55 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை பனிச்சரிவில் சிக்கினா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவம் மற்றும் இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கடும் பனிப்பொழிவு, கனமழைக்கு இடையே பகல் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் 33 போ் காயங்களுடன் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.

மோசமான வானிலை மற்றும் இருள் சூழ்ந்ததால் வெள்ளிக்கிழமை இரவில் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. பின்னா், சனிக்கிழமை அதிகாலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘வெள்ளிக்கிழமை இரவு பனிப்பொழிவு அதிகரித்ததால் மீட்புப் பணியில் தடை ஏற்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை காலை வானிலை தெளிவானது. எனவே, மீட்புப் பணியில் இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்குச் சொந்தமான 6 ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதன்மூலம், பனிச்சரிவில் சிக்கிய மேலும் 17 தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா். இரு தினங்களில் மொத்தம் 50 தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா். இவா்களில் படுகாயமடைந்த நால்வா், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தனா். பனிச்சரிவில் சிக்கியுள்ள மேலும் 5 தொழிலாளா்களை மீட்கும் பணி தொடா்கிறது’ என்றனா்.

சமோலி மாவட்ட ஆட்சியா் சந்தீப் திவாரி கூறுகையில், ‘வானிலை தொடா்ந்து தெளிவாக இருந்தால், எஞ்சிய தொழிலாளா்களையும் விரைந்து மீட்டுவிட முடியும்’ என்றாா்.

முதல்வா் ஆய்வு: பனிச்சரிவால் பாதிக்கப்பட்ட மலைப் பகுதியை ஹெலிகாப்டரில் பறந்தபடி முதல்வா் தாமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வா், ‘பாதிக்கப்பட்ட பகுதிகளை வானில் பறந்தபடி ஆய்வு செய்தேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன். பாதிக்கப்பட்ட தொழிலாளா்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதிப்படுத்தும்’ என்றாா்.

பிரதமா் ஆலோசனை: மற்றொரு பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு சமோலி நிலவரம் குறித்து என்னிடம் கேட்டறிந்தாா். மழை மற்றும் பனிப்பொழிவு நிலவரத்தைக் கேட்டறிந்ததோடு, இந்த அவசரநிலையை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதி தெரிவித்தாா்’ என்று குறிப்பிட்டாா்.

அயோத்தி.. கூட்டம் குறைந்தாலும் குறையாத சிக்கல்! உதவிக்கு வந்த ஜேசிபிக்கள்!!

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தாலும், மாநகராட்சி புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது. உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 2024 ஜனவரி 22ல் ராமர் கோயிலில் ஸ்ரீ ராமரின் சிலை பிராணப் ... மேலும் பார்க்க

ஐஆர்சிடிசி-க்கு நவரத்னா அந்தஸ்து! அப்படியென்றால்?

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்திய ரயில்வே நிதி கழகம் (ஐஆர்எஃப்சி) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தற... மேலும் பார்க்க

பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினாரா அமித் ஷா?

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ர... மேலும் பார்க்க

ஜாதவ்பூர் பல்கலை கலவரம்: அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் மீது வழக்குப்பதிவு!

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழக கலவரத்தில் அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் உள்பட பலர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க கல்வி அமைச்சரான ப... மேலும் பார்க்க

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரி எம்பி ரஷீத் மனு!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளா... மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: கைது செய்யப்பட்டவர் காதலனா?

ஹரியாணா மாநிலத்தில், காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காதல் விவகாரம் பின்னணியாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்த வழக்கில், சச்சின் என்பவரை காவல்துறைய... மேலும் பார்க்க